செய்திகள் :

வெங்காயத்தின் மீதான 20% ஏற்றுமதி வரி நீக்கம்: சிவராஜ் சிங் சௌகான்

post image

புதுதில்லி: ஏப்ரல் 1 முதல் வெங்காய ஏற்றுமதி மீதான 20 சதவிகித சுங்க வரியை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்றார் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்.

இனி வெங்காய ஏற்றுமதிக்கு எந்த வரியும் இருக்காது. விவசாயிகளின் கடின உழைப்பில் பயிரிடப்பட்ட வெங்காயம் உலகளாவிய சந்தைகளை அடையும் போது, சிறந்த விலை கிடைக்க வேண்டும் என்றார்.

முன்னதாக ஏற்றுமதி வரி 40 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டதாகவும், வெங்காய விலை குறையத் தொடங்கியதும், விவசாயிகளுக்கு வருமானம் சரிந்ததையடுத்து, ஏற்றுமதி வரி 20 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், தற்போது 20 சதவிகித ஏற்றுமதி வரியையும் முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

நிதி அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஏற்றுமதி வரி திரும்பப் பெறுதல் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஏற்றுமதி வரி நீக்கம் உள்நாட்டு விவசாயிகளை வெங்காய விலை செங்குத்தான வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதையும் படிக்க: எஃப்.ஐ.ஐ முதலீடுகளால், 6வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து முடிவு!

வளைந்த திரை, வாட்டர் புரூஃப் அம்சங்களுடன் ரியல்மி பி-3!

ரியல்மி நிறுவனம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய பி-3 5ஜி மற்றும் பி-3 அல்ட்ரா ஆகிய இரு அதிநவீன ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றுக்கான விற்பனை இன்று (மார்ச் 26) மதியம் தொடங்கியது. பி3 அல்ட்ரா 5... மேலும் பார்க்க

சரிவிலிருந்து மீளுமா பங்குச்சந்தை? சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

தொடர்ந்து 7 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை இன்று(மார்ச் 26) இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,021.45 என்ற புள்ளிகளில் தொடங்கியது.பிற்பகல் 1... மேலும் பார்க்க

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.65,560-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த மாா்ச் 20-ஆம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்ட நிலைய... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.85.74-ஆக முடிவு!

மும்பை: இறக்குமதியாளர்களிடமிருந்து டாலருக்கான தேவை அதிகரித்த நிலையில், இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரித்ததால் இன்றைய சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.85.7... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 32.81 புள்ளிகள் உயர்வு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தொடர்ந்து 7-வது அமர்வாக உயர்ந்த நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததால் பங்குச் சந்தை ஓரளவு உயர்ந்து முடிந்தது.வர்த்தக நே... மேலும் பார்க்க

தொடர்ந்து 7-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

தொடர்ந்து 7-வது நாளாக பங்குச் சந்தை இன்று(மார்ச் 25) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,296.28 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 10 மணியளவில்,... மேலும் பார்க்க