செய்திகள் :

சிறார்கள் ஊக்க பானங்கள் அருந்தத் தடையா? பஞ்சாப் அரசு ஆலோசனை!

post image

சிறார்கள் ஊக்க பானங்கள் அருந்தத் தடை விதிப்பதற்கு பஞ்சாப் அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது.

இந்தியாவில் ஊக்க பானங்களை வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரும் அருந்துகின்றனர். அதில் இருக்கும் அதிகளவு கஃபீன் மற்றும் டாரைன் எனப்படும் ரசாயனங்கள் உடலுக்கு கேடு விளைவிப்பதாகும்.

சிறார்கள் பலரும் இத்தகைய பானங்களுக்கு அதிகளவில் அடிமையாகி வருகின்றனர். இந்த பானங்களில் கஃபீன் அளவு அனுமதிக்கப்பட்டதைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. எனவே, உடலுக்கு கேடு தரும் ஊக்க பானங்களை சிறார்கள் அருந்த தடை விதிக்க பஞ்சாப் மாநில அரசு ஆலோசனை நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான ஒப்புதலை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பல்பீர் சிங் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, பள்ளிகளில் உள்ள கேண்டீன்கள், பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் ஊக்க பானங்கள் விற்க தடை விதிக்கப்படும்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் முன் இந்தத் தடை சட்டப்பூர்வமாக ஏற்கத்தக்கதா என பஞ்சாப் அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது. இது நடைமுறைக்கு வந்தால் முதன்முதலாக இப்படியான தடை உத்தரவை கொண்டுவந்த மாநிலமாக பஞ்சாப் இருக்கும்.

பல நாடுகளில் 15 வயதிற்குட்பட்டவர்கள் ஊக்க பானங்களை அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஊக்க பானங்கள் மீதான தடைக்கு அமைச்சர் பல்வீர் சிங் ஆலோசித்து வருகிறார்.

சமீபத்தில் பள்ளிகளில் சோதனை நடத்திய அவர் அங்கு மாணவர்கள் பலரும் ரூ. 20 மதிப்பிலான ஊக்க பானங்களைத் தொடர்ந்து அருந்துவதைப் பார்த்தார். மேலும், ஸ்ட்ராபெர்ரி குயிக் எனப்படும் மிட்டாய்களை அவர்கள் தொடர்ந்து உட்கொள்வதையும் அறிந்துகொண்டார்.

இதுகுறித்துப் பேசிய அவர், ”சந்தைகளில் விற்பனையாகும் சில ஊக்க பானங்களில் அதிகளவு காஃபீன் உள்ளன. இதனால், இதயம் சார்ந்த பிரச்னைகள், பதற்றம், வாயு தொல்லை, ரத்த நாளங்களில் பிரச்னை போன்றவை ஏற்படும்.

உலக சுகாதார அமைப்பு 18 வயதுகுட்பட்டவர்கள் இத்தகைய ஊக்க பானங்களை அருந்துவதற்கு எதிராக சில வழிகாட்டுதல்களைக் குறிப்பிட்டுள்ளனர். பள்ளிப் பருவத்தில் இருந்தே இதுபோன்ற பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாவதைத் தடுக்க ஊக்க பானங்கள் விற்பனைக்கு தடை விதிப்பதை அரசு உறுதி செய்யும்” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க | குளிரூட்டிகள் பயன்பாட்டில் இந்தியா முதலிடம்!

உ.பி.: கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு; 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

உத்தரப் பிரதேசத்தில், கட்டணம் செலுத்தாததால் ஆண்டுத் தேர்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் கமலா ஷரன் யாதவ் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.31 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8ஆகப் பதிவானதாக தேசிய புவியியல்... மேலும் பார்க்க

விருப்ப ஓய்வு கோரி வி.கே.பாண்டியனின் மனைவி விண்ணப்பம்

அரசுப் பணியில் இருந்து விருப்ப விருப்ப ஓய்வு கோரி வி. கே. பாண்டியனின் மனைவியும், ஒடிசாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 2001-ஆம் ஆண்டு ஒடிசா பிரிவு ஐ.ஏ.எஸ... மேலும் பார்க்க

தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்த தில்லி துணைநிலை ஆளுநர்!

கர்நாடகத்திற்குப் பயணம் மேற்கொண்ட தில்லி துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனா, உதகையில் பழங்குடி சமூகத்தினரான தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.தில்லி துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனா உதகையில் உள்ள ... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 16 நக்சல்கள் சுட்டுக்கொலை: 2 வீரர்கள் காயம்

சத்தீஸ்கரின் சுக்மாவில் நடந்த என்கவுன்டரில் 16 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா-தந்தேவாடா மாவட்டங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் நேற்று முதல் பாதுகாப்புப் படையினரின் கூ... மேலும் பார்க்க

மியூச்சுவல் ஃபண்டு: அதிகரிக்கும் பெண் முதலீட்டாளர்கள்!

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.முந்தைய தலைமுறையினரைவிட, தற்போதைய தலைமுறையினர் நிதி மேம்பாடு விவகாரத்தில் சிறந்து விளங்குகின்றனர். அந்த வகையில் பங்குச்... மேலும் பார்க்க