செய்திகள் :

படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிய பொன்னி சீரியல் நடிகை! விடியோ வைரல்!

post image

விஜய் தொலைக்காட்சியின் பொன்னி தொடரில் நடித்துவரும் நாயகி வைஷ்ணவி விபத்தில் சிக்கியுள்ளார்.

கடந்த சில நாள்களாக வைஷ்ணவியின் காட்சிகள் இடம்பெறாத நிலையில், அவர் விபத்திற்குப் பிறகு சிகிச்சைப் பெற்றுவரும் விடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பல்வேறு தடைகளைத் தாண்டி பயணிப்பதற்கு சினிமாவின் மீதான அர்ப்பணிப்பும் இலக்கும்தான் காரணம் எனப் பதிவிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் பொன்னி. இத்தொடரில் நாயகனாக சபரி நாதனும் நாயகியாக வைஷ்ணவி சுந்தரும் நடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சிறகடிக்க ஆசை தொடரின் நாயகன் வெற்றி வசந்த்தை நீண்ட நாள்களாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பிறகு மீண்டும் தொடரில் கவனம் செலுத்தி வந்தார் வைஷ்ணவி. இதனிடையே கடந்த சில நாள்களாக வைஷ்ணவி தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பப்படாமல் கதைக்களம் நகர்ந்துகொண்டிருந்தது.

பொன்னி தொடரில் இருந்து வைஷ்ணவி விலகிவிட்டாரா? என்ற கேள்விகளும் சமூக வலைதளப் பக்கங்களில் எழுந்தன.

இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த விபத்தால் கடந்த சில நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாகவும் விடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய வைஷ்ணவி

அந்த விடியோவில், தனது கால் மற்றும் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார். முழுவதுமான குணமடையாக நிலையில், கையில் குச்சியுடன் படப்பிடிப்பு தளத்தில் பங்கேற்றுள்ளார்.

சமீப நாள்களாக வைஷ்ணவியின் காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலர் அவரின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டி வருகின்றனர்.

பொன்னி தொடரின் படப்பிடிப்பில்..

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைஷ்ணவி,

''இந்தத் துறையில் (சினிமா) சவால்கள் உங்களை அழுத்தியெடுக்கும். அங்கீகாரத்துக்காக மட்டும் நான் இந்தத் துறையில் இல்லை, என்னுள் இருக்கும் சிறப்பை வெளிக்கொண்டுவரும் சந்தர்ப்பமாகவே ஒவ்வொரு நாளையும் பார்க்கிறேன். திரையில் தெரியும் ஒவ்வொரு காட்சிகளுக்கும் திரைக்கு பின்னால் பலமணி நேர முன்னேற்பாடுகளும், அர்ப்பணிப்புகளும் இருக்கும். ஒவ்வொரு பாத்திரமும், ஒவ்வொரு தொடரும் ஒரு பெரும் பயணத்தின் பலனாகவே இருக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | பட வாய்ப்புக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்ட சிறகடிக்க ஆசை நடிகை!

ஆர்ஜென்டீனாவுடனான தோல்வி எதிரொலி: பிரேசில் பயிற்சியாளர் நீக்கம்!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனாவுடனான தோல்வியினால் பிரேசில் பயிற்சியாளர் நீக்கப்பட்டுள்ளார். பிரேசில் பயிற்சியாளர் டோரிவல் ஜூனியரின் 14 மாத மோசமான செயல்பாடுகளால் பிரேசில் கால்பந்து கூட்டமைப்... மேலும் பார்க்க

ஓடிடியில் அகத்தியா!

ஜீவா, அர்ஜுன் நடித்த அகத்தியா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த அகத்தியா திரைப்படம் திரையரங்குகளில... மேலும் பார்க்க

திருக்கணிதப்படி: கும்ப ராசியிலிருந்து மீனத்திற்குப் பெயர்ச்சியாகிறார் சனிபகவான்!

ஜோதிடத்தில் திருக்கணிதம், வாக்கியம் என இரு முறைகளில் பஞ்சாங்கம் கணிக்கப்படும் நிலையில், இன்று (மார்ச் 29) திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. அதன்படி, சுக்ல பிரதமையும் சனிக்கிழமையும் ரேவதி நட்ச... மேலும் பார்க்க

வீர தீர சூரன் வசூல் எவ்வளவு?

வீர தீர சூரன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் - அருண் குமார் கூட்டணியில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் வியாழக்கிழமை மாலைக் காட்சியாகத் தாமதமாக வெளியானது. படத்தின் தயாரிப்பு நி... மேலும் பார்க்க

100-ஆவது நாளில் மார்கோ! சிறப்பு போஸ்டர்!

உன்னி முகுந்தன் நடித்த மார்கோ 100-ஆவது நாள் போஸ்டர் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் கடந்த டிச. 20 தேதி வெளியானது.அதிக வன்முறைக் காட்சி... மேலும் பார்க்க

இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் மணிகண்டன்!

நடிகர் மணிகண்டன் மீண்டும் இயக்குநராக படம் ஒன்றை இயக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் மணிகண்டன் குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் திரைப்படங்களுக்குப் பிறகு தமிழில் முன்னணி நடிகராக மாறியுள்ளா... மேலும் பார்க்க