செய்திகள் :

இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் மணிகண்டன்!

post image

நடிகர் மணிகண்டன் மீண்டும் இயக்குநராக படம் ஒன்றை இயக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் மணிகண்டன் குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் திரைப்படங்களுக்குப் பிறகு தமிழில் முன்னணி நடிகராக மாறியுள்ளார்.

நடிப்பு மட்டுமின்றி திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, டப்புங் ஆர்ட்டிஸ்ட், துணை இயக்குநர் என பல துறைகளிலும் மணிகண்டன் பணியாற்றி வருகிறார்.

விஸ்வாசம், விக்ரம் வேதா, தம்பி, சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களின் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்த மணிகண்டன் ஆரம்பகாலத்தில் ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்ட 'நரை எழுதும் சுயசரிதை’ என்ற படத்தின் மூலம் மணிகண்டன் இயக்குநராக அறிமுகமானார்.

டெல்லி கணேஷ், மணிகண்டன் இணைந்து நடித்த இந்தப் படம் சில விருதுகளைப் பெற்ற நிலையில் 2022 ஆம் ஆண்டு சோனி லைவ் தளத்தில் வெளியிடப்பட்டது.

பின்னர் நடிப்பில் பிஸியான நடிகர் மணிகண்டன் இந்தாண்டு வெளியான குடும்பஸ்தன் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை, இயக்குநர் காயத்ரி உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் இதுபற்றிப் பேசிய அவர், “மணிகண்டன் நல்ல திறமைசாலி. அவர் எங்களிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அது மிகவும் சிறந்த கதை. அதனை, அவரே இயக்கி நடிக்கவிருக்கிறார். நாங்கள் அந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என தெரிய வந்துள்ளது.

இதையும் படிக்க | குட் பேட் அக்லி படத்தின் 2-ஆவது பாடல் இன்று வெளியாகிறதா?

தன்பாலின ஈர்ப்பாளராகக் கணவர்... விவாகரத்து வழக்கில் முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை குற்றச்சாட்டு!

விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பமாக தனது கணவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்று முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் வீராங்கனை குற்றம் சாட்டி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அர்ஜுனா விருது வென்றவரான முன்னாள்... மேலும் பார்க்க

ஃபஹத் ஃபாசில், வடிவேலுவின் மாரீசன் வெளியீடு அப்டேட்!

மாரீசன் திரைப்படத்தின் வெளியீடு குறித்து அறிவித்துள்ளனர்.மாமன்னனில் மிகச்சிறப்பாகநடித்தவடிவேலுவை நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முயன்று வருகின்றனர். அதற்காக, நிறைய கதைகளை வடிவேலு... மேலும் பார்க்க

எம்புரான் 3 நிமிட காட்சிகள் நீக்கம்!

எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் நீக்கப்பட்டது.எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் மோகன்லால் - பிருத்விராஜ்ஜ... மேலும் பார்க்க

நிறைவடையும் ரஞ்சனி சீரியல்: அன்னம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ரஞ்சனி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளதால், இத்தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் அன்னம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ரஞ்சனி தொடர் ஒளிபரப... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குநர் சனோஜ் மிஸ்ர கைது!

பிரபல பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ர பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார். ஸ்ரீநகர், கஸ்னவி, தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சனோஜ் மிஸ்ர. பெரிய வெற்றிகளைக் கொடுக்காவ... மேலும் பார்க்க