செய்திகள் :

இந்திய அணிக்கு எதிராக ஒளிந்துகொள்ள இடம் கிடையாது; ஜோ ரூட் சொல்வதென்ன?

post image

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடருக்குப் பிறகு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 முதல் தொடங்குகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து 2025-2027 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான சுழற்சி தொடங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற தவறியது.

அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தே இந்திய அணி நன்றாக விளையாட வேண்டும்.

ஜோ ரூட் சொல்வதென்ன?

இந்தியா போன்ற அசைக்க முடியாத வலுவான அணிக்கு எதிராக விளையாடும்போது ஒளிந்து கொள்ள இடம் கிடையாது எனவும், தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடினால் மட்டுமே இந்தியாவை வீழ்த்த முடியும் எனவும் ஜோ ரூட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிக்க: இந்தியா போன்று அணியை தேர்வு செய்யுங்கள்; பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடியுள்ளது. ஆனால், இந்தியா போன்ற மிகவும் வலிமையான அணிக்கு எதிராக விளையாடும்போது, எங்கும் ஓடி ஒளிந்துகொள்ள இடங்கள் கிடையாது. இந்தியாவை வெல்ல வேண்டுமென்றால், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

அண்மையில் நிறைவடைந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி குரூப் ஸ்டேஜில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி தொடரிலிருந்து வெளியேறியது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறிய போதிலும், அந்த அணிக்காக சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 225 ரன்கள் குவித்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மே.இ.தீவுகள் டெஸ்ட் அணி கேப்டன் பதவி விலகல்! டி20 கேப்டனாகும் ஷாய் ஹோப்!

மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் கேப்டன் கிரெய்க் பிராத்வெய்ட் தனது தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது. மேலும், டி20 அண... மேலும் பார்க்க

கைவிடப்பட்ட பாகிஸ்தான் - வங்கதேசம் ஒருநாள் தொடர்; காரணம் என்ன?

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதாக இ... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களுக்குள் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் ... மேலும் பார்க்க

29 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற தெற்கு ஆஸ்திரேலியா!

ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாகும். இந்தியாவில் நடக்கும் ரஞ்சி கோப... மேலும் பார்க்க

சாப்மன் சதம்: 73 ரன்கள் வித்தியாசத்தில் நியூசி. வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.டி20 தொடரை 4-1 என வென்ற நியூசிலாந்து ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் இருகிறது. முதலில் பேட்டிங்... மேலும் பார்க்க

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆகிறாரா ஜோ ரூட்?

இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்படுவது குறித்து ஜோ ரூட் மனம் திறந்துள்ளார்.அண்மையில் நிறைவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பா... மேலும் பார்க்க