செய்திகள் :

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆகிறாரா ஜோ ரூட்?

post image

இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்படுவது குறித்து ஜோ ரூட் மனம் திறந்துள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்படத் தவறியது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி குரூப் ஸ்டேஜில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து, ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்.

கேப்டனாகிறாரா ஜோ ரூட்?

வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான (ஒருநாள், டி20) புதிய கேப்டனை தேடும் பணியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டனாக உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக செயல்பட கவனம் செலுத்தி வருவதாகவும் ஜோ ரூட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிக்க: எம்.எஸ்.தோனியின் பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் இப்படி நினைப்பது சரியா? அம்பத்தி ராயுடு சொல்வதென்ன?

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே, இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். ஆனால், இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு யாருக்கு கிடைத்தாலும், அது மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறியது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால், இங்கிலாந்து அணி மிகவும் திறமை வாய்ந்த அணி. இனிவரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்.

இங்கிலாந்து அணி அடுத்து இரண்டு மிகப் பெரிய டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இங்கிலாந்து அணி அதனை நன்றாக கட்டமைத்து வருவதாக நினைக்கிறேன். ஆஷஸ் தொடரை எங்களால் வெல்ல முடியும் என நினைக்கிறேன். சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களுக்குள் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் ... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு எதிராக ஒளிந்துகொள்ள இடம் கிடையாது; ஜோ ரூட் சொல்வதென்ன?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பேசியுள்ளார்.ஐபிஎல் தொடருக்குப் பிறகு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, இங்கிலாந்துடன் 5 ... மேலும் பார்க்க

29 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற தெற்கு ஆஸ்திரேலியா!

ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாகும். இந்தியாவில் நடக்கும் ரஞ்சி கோப... மேலும் பார்க்க

சாப்மன் சதம்: 73 ரன்கள் வித்தியாசத்தில் நியூசி. வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.டி20 தொடரை 4-1 என வென்ற நியூசிலாந்து ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் இருகிறது. முதலில் பேட்டிங்... மேலும் பார்க்க

இந்தியா போன்று அணியை தேர்வு செய்யுங்கள்; பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

நியூசிலாந்துக்கு எதிராக மோசமாக விளையாடி டி20 தொடரை இழந்த பாகிஸ்தான் அணியை அந்த அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவில் முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து பங்கேற்பு!

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அந்நாட்டில் முத்தரப்பு டி20 தொடரை நடத்தவுள்ளது.ஜிம்பாப்வே அணி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்க... மேலும் பார்க்க