செய்திகள் :

இந்தியா போன்று அணியை தேர்வு செய்யுங்கள்; பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

post image

நியூசிலாந்துக்கு எதிராக மோசமாக விளையாடி டி20 தொடரை இழந்த பாகிஸ்தான் அணியை அந்த அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

கடுமையாக விமர்சித்த கம்ரான் அக்மல்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இழந்த நிலையில், இந்திய அணியைப் போன்று திறமையின் அடிப்படையில் பாகிஸ்தான் அணியும் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் அந்த அணியை விமர்சித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிக்க: ஜிம்பாப்வேவில் முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து பங்கேற்பு!

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணி உள்ளூர் அணியைப் போன்று விளையாடியது. மிகவும் வெட்கப்படும்படியான ஆட்டத்தை பாகிஸ்தான் வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடரைப் பாருங்கள். ஐபிஎல் தொடரில் விளையாடும் இளம் வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடினால், அவர்கள் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்திவிடுவார்கள். திறமையின் அடிப்படையில் இந்திய அணியில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதால், அவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறுகிறார்கள். ஆனால், பாகிஸ்தான் அணியில் வீரர்கள் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை என்றார்.

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (மார்ச் 29) தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களுக்குள் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் ... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு எதிராக ஒளிந்துகொள்ள இடம் கிடையாது; ஜோ ரூட் சொல்வதென்ன?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பேசியுள்ளார்.ஐபிஎல் தொடருக்குப் பிறகு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, இங்கிலாந்துடன் 5 ... மேலும் பார்க்க

29 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற தெற்கு ஆஸ்திரேலியா!

ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாகும். இந்தியாவில் நடக்கும் ரஞ்சி கோப... மேலும் பார்க்க

சாப்மன் சதம்: 73 ரன்கள் வித்தியாசத்தில் நியூசி. வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.டி20 தொடரை 4-1 என வென்ற நியூசிலாந்து ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் இருகிறது. முதலில் பேட்டிங்... மேலும் பார்க்க

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆகிறாரா ஜோ ரூட்?

இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்படுவது குறித்து ஜோ ரூட் மனம் திறந்துள்ளார்.அண்மையில் நிறைவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பா... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவில் முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து பங்கேற்பு!

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அந்நாட்டில் முத்தரப்பு டி20 தொடரை நடத்தவுள்ளது.ஜிம்பாப்வே அணி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்க... மேலும் பார்க்க