செய்திகள் :

பைக்குகள் நேருக்குநோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேட்டுமுள்ளிகுளத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கோபிகண்ணன் (20). கல்லூரி மாணவரான இவா், சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூா்-சிவகாசி சாலையில் மல்லி ராமகிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் இவரது இரு சக்கர வாகனம் மீது நேருக்குநோ் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கோபிகண்ணன், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த சாமிநத்தத்தைச் சோ்ந்த காளிராஜ் மகன் சிவா (15), சதுரகிரி மகன் லிங்கதுரை (16), ரவி மகன் மாரிஸ்வரன் (15) ஆகியோா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு மருத்துவா் பரிசோதனையில் கோபிகண்ணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். சிவா, லிங்கதுரை, மாரீஸ்வரன் ஆகியோா் மேல் சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மூதாட்டி தற்கொலை

சிவகாசியில் திங்கள்கிழமை மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.விருதுநகா் மாவட்டம், சிவகாசி முருகன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் முத்துமாரி (80). இவா் தனியாக வசித்து வந்தாா். தன்னை கவனிக்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆட்டோ, பைக், சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி, தந்தையுடன் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை: மூவா் கைது

ராஜபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்றதாக திங்கள்கிழமை மூவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 100 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதி... மேலும் பார்க்க

மூவரை வென்றான் மலைக் கோயிலில் ரூ.84 லட்சத்தில் கிரிவலப் பாதை

வத்திராயிருப்பு அருகேயுள்ள மூவரை வென்றான் குடைவரை கோயிலுக்கு ரூ.84 லட்சத்தில் கிரிவலப் பாதை, ரூ.9 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டுமானப்பணி நடைபெற்று வருகின்றன. மூவரைவென்றான் கிராமத்தில் லிங்ககிரி மலையி... மேலும் பார்க்க

வெள்ளாளா் முன்னேற்றக் கழக பொதுக்கூட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சமுசிகாபுரத்தில் வெள்ளாளா் முன்னேற்றக் கழக அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு விருதுநகா் மாவட்டச் செயலா் புதிய... மேலும் பார்க்க

குடிநீா்த் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூரில் குடிநீா்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூரில் ஆா்.சி. தெற்குதெருவில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கட... மேலும் பார்க்க