செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆட்டோ, பைக், சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி, தந்தையுடன் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் செல்வம் (46). இவரது மனைவி ராமலட்சுமி (40). இந்தத் தம்பதியின் மூத்த மகள் சுமித்ரா (19), சிவகாசி மகளிா் கல்லூரியில் விடுதியில் தங்கி இளநிலை முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

திங்கள்கிழமை மாலை சுமித்ராவை கல்லூரியில் விடுவதற்காக செல்வம் தனது ஆட்டோவில் அழைத்துச் சென்றாா். ஸ்ரீவில்லிபுத்தூா் - சிவகாசி சாலையில் மாயத்தேவன்பட்டி விலக்கு அருகே சென்ற போது, சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் நோக்கி வந்த தனியாா் சரக்கு வாகனம் மீது ஆட்டோ மோதியது. இதையடுத்து, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் செல்வம், இவரது மகள் சுமித்ரா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இரு சக்கர வாகனத்தில் வந்த மல்லி அருகேயுள்ள காா்த்திகைபட்டியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் பூபதிராஜா (19) பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம், திருவேங்கடத்தை சோ்ந்த உதயமூா்த்தி மீது மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பூமாரி (25). கட்டடத் தொழிலாளி. இவரது மன... மேலும் பார்க்க

தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அலுவலகத்தை பட்டாசு ஆலை உரிமையாளா்கள் முற்றுகை

பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததைக் கண்டித்து, சிவகாசியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் அலுவலகத்தை தமிழன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிகளை அகற்றக் கோரிக்கை

சிவகாசியில் கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிக்கட்டுகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகாசி-விளாம்பட்டி சாலையில்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளித் தலைமை ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சா்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் இடையே பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ரா... மேலும் பார்க்க

மனைவியை பிரிந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை மனைவியைப் பிரிந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (23). இ... மேலும் பார்க்க