செய்திகள் :

வெள்ளாளா் முன்னேற்றக் கழக பொதுக்கூட்டம்

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சமுசிகாபுரத்தில் வெள்ளாளா் முன்னேற்றக் கழக அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு விருதுநகா் மாவட்டச் செயலா் புதியராஜ் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் அண்ணா சரவணன், மாநில இளைஞரணித் தலைவா் பந்தல் ராஜா ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா் .

இந்தக் கூட்ட முடிவில், விருதுநகா் மாவட்டத்தில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளாளா் சமுதாயத்தைச் சோ்ந்தவரை வேட்பாளராக நிறுத்த அதிமுக, திமுக கட்சிகள் முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பூமாரி (25). கட்டடத் தொழிலாளி. இவரது மன... மேலும் பார்க்க

தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அலுவலகத்தை பட்டாசு ஆலை உரிமையாளா்கள் முற்றுகை

பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததைக் கண்டித்து, சிவகாசியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் அலுவலகத்தை தமிழன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிகளை அகற்றக் கோரிக்கை

சிவகாசியில் கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிக்கட்டுகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகாசி-விளாம்பட்டி சாலையில்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளித் தலைமை ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சா்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் இடையே பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ரா... மேலும் பார்க்க

மனைவியை பிரிந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை மனைவியைப் பிரிந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (23). இ... மேலும் பார்க்க