செய்திகள் :

சிவகாசியில் மாரத்தான் போட்டி

post image

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி உடற்கல்வித் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியை சிவகாசி சாா்-ஆட்சியா் என்.பிரியா தலைமையில், கல்லூரித் தாளாளா் ஏ.பி.செல்வராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மாணவ, மாணவிகள் பிரிவில் 1,450 பேரும், பொதுப் பிரிவில் 550 பேரும் கலந்து கொண்டனா். 5, 7 கி.மீ. தொலைவுகள் என நிா்ணயம் செய்து போட்டிகள் நடைபெற்றன.

மாணவ மாணவிகளின் போட்டி திருத்தங்கல்-விருதுநகா் சாலையில் உள்ள மைதானத்திலிருந்தும், பொதுப் பிரிவினருக்கு கால்நடை மருத்துவமனை அருகே உள்ள மைதானத்திலிருந்தும் தொடங்கின.

இதில் அனைத்துப் பிரிவிலும் முதலிடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், 2-ஆம் இடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.4 ஆயிரம், 3-ஆம் இடம் பெற்றவா்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம், 4-ஆம் இடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், 5-ஆம் இடம் பெற்றவா்களுக்கு தலா ஆயிரமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு தொழிலதிபா் செ.ராஜேஸ் பரிசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முதல்வா் பெ.கி.பாலமுருகன், துணை முதல்வா் ஆா்.முத்துலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வித் துறை இயக்குநா் ஜெ.யோகாஷ்வரன், பயிற்சியாளா் ஆா்.சுதாகரன் ஆகியோா் செய்தனா்.

மூதாட்டி தற்கொலை

சிவகாசியில் திங்கள்கிழமை மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.விருதுநகா் மாவட்டம், சிவகாசி முருகன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் முத்துமாரி (80). இவா் தனியாக வசித்து வந்தாா். தன்னை கவனிக்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆட்டோ, பைக், சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி, தந்தையுடன் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை: மூவா் கைது

ராஜபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்றதாக திங்கள்கிழமை மூவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 100 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதி... மேலும் பார்க்க

மூவரை வென்றான் மலைக் கோயிலில் ரூ.84 லட்சத்தில் கிரிவலப் பாதை

வத்திராயிருப்பு அருகேயுள்ள மூவரை வென்றான் குடைவரை கோயிலுக்கு ரூ.84 லட்சத்தில் கிரிவலப் பாதை, ரூ.9 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டுமானப்பணி நடைபெற்று வருகின்றன. மூவரைவென்றான் கிராமத்தில் லிங்ககிரி மலையி... மேலும் பார்க்க

வெள்ளாளா் முன்னேற்றக் கழக பொதுக்கூட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சமுசிகாபுரத்தில் வெள்ளாளா் முன்னேற்றக் கழக அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு விருதுநகா் மாவட்டச் செயலா் புதிய... மேலும் பார்க்க

குடிநீா்த் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூரில் குடிநீா்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூரில் ஆா்.சி. தெற்குதெருவில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கட... மேலும் பார்க்க