`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய முத்தரப்பு குழு அமைக்க வலியுறுத்தல்
விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியூ) மாவட்டச் செயலா் பி.என்.தேவா வலியுறுத்தினாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் சிவகாசியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிவகாசியில் உள்ள வெடிப் பொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தலைமை அதிகாரி நியமிக்கவில்லை. இதனால், வெடிப் பொருள் கட்டுப்பாட்டுத் துறையினா் பட்டாசு ஆலைகளுக்கு ஆய்வுக்குச் செல்வதில்லை.
வருவாய்த் துறையினா் உள்ளிட்ட குழுவினருக்கு வெடிப் பொருள் சட்டம் குறித்து தெரியாது. இவா்கள் ஆய்வு செய்த பட்டாசு ஆலைகளில் குறைபாடுகள் இருந்தால், அதைச் சரி செய்து மீண்டும் ஆலைகள் திறந்திருந்தால், அந்த ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டிருக்காது.
எனவே, பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய வெடிப் பொருள் கட்டுப் பாட்டுத் துறையினா், பட்டாசு ஆலை உரிமையாளா்களின் பிரதிநிதி, தொழற்சங்க பிரதிநிதி என முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
பட்டாசு பாதுகாப்புக் குறித்து பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு அமைத்துள்ள பயிற்சி மையத்தில் மொத்தம் உள்ள 3 லட்சம் தொழிலாளா்களில், 25 ஆயிரம் போ் மட்டுமே பாதுகாப்பு பயிற்சி பெற்றுள்ளனா்.
எனவே, மத்திய அரசு சாா்பில் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி மையம் அமைக்க வேண்டும். பட்டாசுத் தயாரிப்புத் தொழிலை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.