செய்திகள் :

தொடர்ந்து 7-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

post image

தொடர்ந்து 7-வது நாளாக பங்குச் சந்தை இன்று(மார்ச் 25) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,296.28 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 10 மணியளவில், சென்செக்ஸ் 738.58 புள்ளிகள் அதிகரித்து 78,722.96 புள்ளிகளில் இருந்தது. அதன்பின்னர் சரிந்து மீண்டு தற்போது ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.

பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 45.55 புள்ளிகள் அதிகரித்து 78,029.93 புள்ளிகளில் இருக்கிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27.10 புள்ளிகள் உயர்ந்து 23,685.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இதையும் படிக்க | தில்லி பட்ஜெட் ரூ. 1 லட்சம் கோடி; மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500

சென்செக்ஸ் பங்குகளில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் எச்சிஎல் டெக் ஆகியநிறுவனங்களின் பங்குகள் விலை 3% வரை உயர்ந்தன.

அதேநேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.

கடந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்த நிலையில் நேற்றும்(திங்கள்கிழமை) ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் 16-க்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு மொபைல்கள்!

ஆப்பிள் ஐபோன் 16 புரோ மேக்ஸ் அதிநவீன தொழில் நுட்பவசதிகளுடன் சந்தையில் விற்பனைக்கு வந்திருந்தாலும் அதற்குப் போட்டியாக குறிப்பிடத்தக்க 5 ஆண்ட்ராய்டு மொபல்களும் களமிறக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் ஐபோன் 16 புரோ... மேலும் பார்க்க

அதிரடியாக உச்சம் தொட்ட தங்கம் விலை! அதிர்ச்சியில் மக்கள்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 இன்று உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ... மேலும் பார்க்க

விலை உயரும் பிஎம்டபிள்யு காா்கள்

சொகுசுக் காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யு குரூப் இந்தியா, தனது வாகனங்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

பங்குச் சந்தை இன்று(மார்ச் 27) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,087.39 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11.50 மணியளவில், சென்செக்ஸ் 419.26 ... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 இன்று உயர்ந்துள்ளது.இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், புதன்கிழமை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 65,560-க்கு விற்பன... மேலும் பார்க்க

யுபிஐ சேவை பாதிப்பு: பயனா்கள் அவதி

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் புதன்கிழமை இரவு கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ சேவை பாதிக்கப்பட்டதால் பயனா்கள் அவதிக்குள்ளாகினா். இணைய பரிவா்த்தனையில் முக்கியப் பங்கு வகிக்கும் கூகுள் பே, போன் பே... மேலும் பார்க்க