செய்திகள் :

குளிரூட்டிகள் பயன்பாட்டில் இந்தியா முதலிடம்!

post image

இந்தியாவில் வரும் ஆண்டுகளில் குளிரூட்டிகளின் விலையும், மின்சாரத் தேவையும் அதிகரிக்கும் என்று அமெரிக்க பல்கலைக் கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மொத்த மக்கள்தொகையைப் பொறுத்தவரை, குளிரூட்டிகளின் அதிகப்படியான தேவையில் இந்தியா முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து சீனா, நைஜீரியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், வங்கதேசம், பிரேசில், பிலிப்பின்ஸ், அமெரிக்கா இருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உள்ள இந்திய ஆய்வு மையத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் அடுத்த பத்தாண்டுகளில் குளிரூட்டிகளின் தேவை அதிகரிக்கும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இந்திய எரிசக்தி மற்றும் காலநிலை மையம் நடத்திய ஆய்வில் கூறியுள்ளது.

இதையும் படிக்க:வளைந்த திரை, வாட்டர் புரூஃப் அம்சங்களுடன் ரியல்மி பி-3!

ஆய்வில் தெரிவித்ததாவது, இந்தியாவில் 2035 ஆம் ஆண்டில் வீட்டுப் பயன்பாட்டு குளிரூட்டிகளின் தேவை 130 மில்லியன் முதல் 150 மில்லியன்வரையில் அதிகரிக்கக் கூடும்.

இதன் மூலம், நாட்டின் உச்சபட்ச மின்தேவையும் 2020 ஆம் ஆண்டில் 120 ஜிகாவாட்டும், 2035-ல் 180 ஜிகாவாட்டுக்கும் அதிகமாக அதிகரிக்கக் கூடும். இது கிட்டத்தட்ட 30 சதவிகித அதிகரிப்பாகும்.

இந்த வளர்ச்சி, மின் பற்றாக்குறைக்கும் வழி வகுக்கலாம். இந்தியாவில், தற்போது வெப்ப அலை அதிகமாகும் வாய்ப்புகள் இருப்பதால், மின் தேவையும் 10 சதவிகிதம்வரையில் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும், குளிரூட்டிகளின் தேவை அதிகரிப்பதால், எரிசக்தி செயல்திறனை இரட்டிப்பாக்குவதன் மூலம் நுகர்வோருக்கு ரூ. 2.2 லட்சம் கோடிவரையில் பலன் கிடைக்கலாம்.

தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்த தில்லி துணைநிலை ஆளுநர்!

கர்நாடகத்திற்குப் பயணம் மேற்கொண்ட தில்லி துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனா, உதகையில் பழங்குடி சமூகத்தினரான தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.தில்லி துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனா உதகையில் உள்ள ... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 16 நக்சல்கள் சுட்டுக்கொலை: 2 வீரர்கள் காயம்

சத்தீஸ்கரின் சுக்மாவில் நடந்த என்கவுன்டரில் 16 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா-தந்தேவாடா மாவட்டங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் நேற்று முதல் பாதுகாப்புப் படையினரின் கூ... மேலும் பார்க்க

மியூச்சுவல் ஃபண்டு: அதிகரிக்கும் பெண் முதலீட்டாளர்கள்!

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.முந்தைய தலைமுறையினரைவிட, தற்போதைய தலைமுறையினர் நிதி மேம்பாடு விவகாரத்தில் சிறந்து விளங்குகின்றனர். அந்த வகையில் பங்குச்... மேலும் பார்க்க

குழந்தைக்காக முதியவரின் தலை துண்டித்து கொலை

பிகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி, முதியவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த மாந்திரீகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பிகாரில் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் யுக்வல் யாதவ் (65) என்பவர் காணாமல் போய்வ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்: தாயகம் திரும்பிய இந்திய பயணிகள்!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் இருந்து இந்திய பயணிகள் தாயகம் திரும்பினர். மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் ம... மேலும் பார்க்க

ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்த... மேலும் பார்க்க