அதிநவீன கண் மருத்துவமனை அமைக்க ரூ.110 கோடி முதலீடு செய்யும் சங்கரா அறக்கட்டளை!
புதுதில்லி: பாட்னாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை அமைக்க சங்கரா கண் அறக்கட்டளை ரூ.110 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
பாட்னாவின் உள்ள கன்கர்பக்கில் 1.60 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள இந்த மருத்துவமனையானது, லாப - நோக்கற்ற கண் பராமரிப்பு சேவை வழங்கும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவமனை ஆண்டுதோறும் 30,000 இலவச கண் அறுவை சிகிச்சை செய்யும் திறனைக் கொண்டிருக்கும். இது பிகார், உத்தர பிரதேசம் மற்றும் அண்டை மாநிலங்களின் உள்ள நோயாளிகளுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தும் என்று சங்கரா கண் அறக்கட்டளை இந்தியா தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனையானது 2026ஆம் ஆண்டு, ஜூலை முதல் செயல்படும்.
மருத்துவமனையானது சுமார் ரூ.110 கோடி முதலீட்டில் கட்டப்படும். பாட்னாவில் சங்கரா கண் மருத்துவமனை தொடங்கப்பட்டதன் மூலம், அணுகல் குறைவாக உள்ள பகுதிகளுக்கு, உலகத்தரம் வாய்ந்த கண் சிகிச்சையை நாங்கள் கொண்டு வருகிறோம்.
இந்த மருத்துவமனை பாட்னாவில் அமைந்துள்ளதால், அருகிலுள்ள மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கும் எங்களின் சேவை விரிவடையும் என்றார் சங்கரா கண் அறக்கட்டளை இந்தியா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலரான ஆர்.வி. ரமணி.
பாட்னா மருத்துவமனையானது சங்கரா கண் அறக்கட்டளையின் 15 வது மருத்துவமனையாக இருக்கும் நிலையில், தற்போது 10 மாநிலங்களில் 14 மருத்துவமனைகள், சங்கரா கண் அறக்கட்டளை வலையமைப்பைக் கொண்டுள்ளது.
இதையும் படிக்க: வெங்காயத்தின் மீதான 20% ஏற்றுமதி வரி நீக்கம்: சிவராஜ் சிங் சௌகான்