செய்திகள் :

அதிநவீன கண் மருத்துவமனை அமைக்க ரூ.110 கோடி முதலீடு செய்யும் சங்கரா அறக்கட்டளை!

post image

புதுதில்லி: பாட்னாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை அமைக்க சங்கரா கண் அறக்கட்டளை ரூ.110 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

பாட்னாவின் உள்ள கன்கர்பக்கில் 1.60 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள இந்த மருத்துவமனையானது, லாப - நோக்கற்ற கண் பராமரிப்பு சேவை வழங்கும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவமனை ஆண்டுதோறும் 30,000 இலவச கண் அறுவை சிகிச்சை செய்யும் திறனைக் கொண்டிருக்கும். இது பிகார், உத்தர பிரதேசம் மற்றும் அண்டை மாநிலங்களின் உள்ள நோயாளிகளுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தும் என்று சங்கரா கண் அறக்கட்டளை இந்தியா தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனையானது 2026ஆம் ஆண்டு, ஜூலை முதல் செயல்படும்.

மருத்துவமனையானது சுமார் ரூ.110 கோடி முதலீட்டில் கட்டப்படும். பாட்னாவில் சங்கரா கண் மருத்துவமனை தொடங்கப்பட்டதன் மூலம், அணுகல் குறைவாக உள்ள பகுதிகளுக்கு, உலகத்தரம் வாய்ந்த கண் சிகிச்சையை நாங்கள் கொண்டு வருகிறோம்.

இந்த மருத்துவமனை பாட்னாவில் அமைந்துள்ளதால், அருகிலுள்ள மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கும் எங்களின் சேவை விரிவடையும் என்றார் சங்கரா கண் அறக்கட்டளை இந்தியா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலரான ஆர்.வி. ரமணி.

பாட்னா மருத்துவமனையானது சங்கரா கண் அறக்கட்டளையின் 15 வது மருத்துவமனையாக இருக்கும் நிலையில், தற்போது 10 மாநிலங்களில் 14 மருத்துவமனைகள், சங்கரா கண் அறக்கட்டளை வலையமைப்பைக் கொண்டுள்ளது.

இதையும் படிக்க: வெங்காயத்தின் மீதான 20% ஏற்றுமதி வரி நீக்கம்: சிவராஜ் சிங் சௌகான்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.85.74-ஆக முடிவு!

மும்பை: இறக்குமதியாளர்களிடமிருந்து டாலருக்கான தேவை அதிகரித்த நிலையில், இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரித்ததால் இன்றைய சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.85.7... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 32.81 புள்ளிகள் உயர்வு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தொடர்ந்து 7-வது அமர்வாக உயர்ந்த நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததால் பங்குச் சந்தை ஓரளவு உயர்ந்து முடிந்தது.வர்த்தக நே... மேலும் பார்க்க

தொடர்ந்து 7-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

தொடர்ந்து 7-வது நாளாக பங்குச் சந்தை இன்று(மார்ச் 25) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,296.28 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 10 மணியளவில்,... மேலும் பார்க்க

பங்குச் சந்தை: 7-வது நாளாக ஏற்றத்துடன் தொடக்கம்!

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 7-வது நாளாக செவ்வாய்க்கிழமை காலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன், சென்செக்ஸ் 311.90 புள்ளிகள் உயர்ந்து 78,296.28 புள்ளிகளாக வர்த்... மேலும் பார்க்க

வெங்காயத்தின் மீதான 20% ஏற்றுமதி வரி நீக்கம்: சிவராஜ் சிங் சௌகான்

புதுதில்லி: ஏப்ரல் 1 முதல் வெங்காய ஏற்றுமதி மீதான 20 சதவிகித சுங்க வரியை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்றார் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்.இனி வெங்காய ஏற்... மேலும் பார்க்க

மஹிந்திராவின் புதிய மின்சார கார்! ஒருமுறை சார்ஜ் செய்தால் 682 கி.மீ. பயணம்!

மஹிந்திராவின் பிஇ - 6 என்ற புதிய மின்னணு வாகனத்தை முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை மஹிந்திரா நிறுவனம் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகமான இந்த வாகனம், ரூ. 18.90 லட்சத்... மேலும் பார்க்க