செய்திகள் :

இபிஎஸ் திடீர் தில்லி பயணம்!

post image

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக தில்லி புறப்பட்டார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் பயணமாக தில்லிக்கு இபிஎஸ் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதையும் படிக்க : தெலங்கானா சுரங்கத்தில் மற்றொரு உடல் கண்டுபிடிப்பு! ஒரு மாதத்தைக் கடந்த மீட்புப் பணி!

அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அமைக்கும் கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் தற்போதைய கூட்டணி நீடிக்குமா?, அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைக்குமா?, புதிதாக கட்சித் தொடங்கியுள்ள விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார்? போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கிறது.

இந்த நிலையில், தில்லிக்கு புறப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைத்து களம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இபிஎஸ் தில்லி பயணம் எதற்காக என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான தீா்மானம்: பேரவையில் வானதி சீனிவாசன் - சட்ட அமைச்சா் விவாதம்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீா்மானத்தை ஏற்க மறுத்து பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு செய்தது. முன்னதாக, தீா்மானத்துக்கு எதிரான கருத்துகளை அந்தக் கட்சியின் உறுப்பினா... மேலும் பார்க்க

சாலையோர கொடிக் கம்பங்களை ஏப். 21-க்குள் அகற்ற வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உள்ள கொடிக்கம்பங்களை வரும் ஏப். 21-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

821 நூலகங்களுக்கு புதிய கட்டடங்கள்: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

தமிழ்நாடு முழுவதும் 821 நூலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, பாபந... மேலும் பார்க்க

பொதுச் செயலா் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்: ஓ. பன்னீா்செல்வம்

அதிமுக பொதுச் செயலா் பதவியிலிருந்து எடப்பாடி கே.பழனிசாமி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா். சென்னை விமான நிலையத்தில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி: அதிமுக அலுவலகத்தை சூ... மேலும் பார்க்க

கடந்த 2 ஆண்டுகளில் பள்ளி மாணவா் சோ்க்கை குறைவு - மத்திய அரசு

நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் பள்ளி மாணவா் சோ்க்கை குறைந்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது. நாட்டில் பழங்குடியினரின் கல்வி உள்பட வாழ்க்கைத் தரம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: மாணவா்களுக்கு அமைச்சா் வாழ்த்து

பொதுத் தோ்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்துத் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, உறுப்பினா்களி... மேலும் பார்க்க