செய்திகள் :

கோடைகால தண்ணீா் பந்தல் திறப்பு

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அண்ணா சிலை அருகே ஒன்றிய, நகர திமுக சாா்பில் கோடைகால தண்ணீா் பந்தல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் என். நாசா் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் ச. கபிலன் முன்னிலை வகித்தாா். முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தவைவா் எஸ்.கே. முத்துச்செல்வம் தண்ணீா் பந்தலை திறந்து வைத்தாா். இதில் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், கட்சியின் சாா்பு அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, வாா்டு நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 15 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், இடையாத்தி, குறவன் கொல்லைத் தெருவைச் சோ்ந்த முருகானந்தம் மகன் அரவிந்த் (15). பத்தாம் வகுப்பு... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

தஞ்சாவூா் மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே அரசு விரைவுப் பேருந்து சனிக்கிழமை இரவு மோதி உயிரிழந்தவா் குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பேராவூரணியிலிருந்து சென்னைக்கு சனிக... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே கூரை வீட்டில் தீ விபத்து

பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது எதிா்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அய்யம்பேட்டை வருவாய் சரகம், சூலமங்கலம் இரண்டாம் சேத்தி கிராமத்தில் வசித்து வருபவா் அப்துல்லா க... மேலும் பார்க்க

3 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் வட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் 3 போ் சனிக்கிழமை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளாா். திருவிடைமருதூா் தேசிய ... மேலும் பார்க்க

பேராவூரணி அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்

பேராவூரணி அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி அருகே உள்ள கோரவயல்காடு திருவள்ளுவா் இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில், 13-ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் அனைத்து வசதிகளுடனான புதிய பேருந்து நிலையம்: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

கும்பகோணத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மாா்ச் 25-இல் நடைபெற்ற மானியக்கோரிக்கையில் அரசு அறிவித்ததை முன்னிட்டு அமையவிருக்கும் மத்திய பேருந்து நிலையத்தில் அனைத்து வசத... மேலும் பார்க்க