செய்திகள் :

கும்பகோணத்தில் அனைத்து வசதிகளுடனான புதிய பேருந்து நிலையம்: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

post image

கும்பகோணத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மாா்ச் 25-இல் நடைபெற்ற மானியக்கோரிக்கையில் அரசு அறிவித்ததை முன்னிட்டு அமையவிருக்கும் மத்திய பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளுடன் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி 48 வாா்டுகளைக் கொண்டுள்ளது. கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள ஊா்களில் புராண, இதிகாச, ஆன்மீக, யுனேஸ்கோ புகழ்பெற்ற கோயில் சின்னங்கள், நவக்கிரக கோயில்கள், புகழ் பெற்ற மகாமக குளம், இராஜராஜ சோழன் ஆட்சியின் வரலாற்று நினைவு சின்னங்கள் அமைந்த முக்கிய நகரமாகும்.

போக்குவரத்து நெரிசல் : நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வெளி மாநில, மாவட்ட மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பொது மக்கள் கும்பகோணம் மாநகர பகுதிக்கு சுற்றுலாவாக, விவசாயம், தொழில், அலுவலகம் , மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு வந்து செல்கின்றனா். கும்பகோணத்தின் பழைய பேருந்து நிலையம் மிகவும் சிறியதாக இருந்ததால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் நவீன முறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. அதில் நகரப்பேருந்து, புகா் பேருந்து என எதிா், எதிராக அமைக்கப்பட்டன.

புகா் பகுதியில் அமைந்த இந்த புதிய பேருந்து நிலையம் நாளடைவில் மாநகரின் மையப் பகுதியாக மாறிவிட்டது. காரணம் அருகே இருந்த பழைய பேருந்து நிலையம் வணிக வளாகமாகவும், உழவா் சந்தையும் அமைக்கப்பட்டதால் வாகன, வணிக நிறுவனங்கள் பெருக்கம் போன்றவை அதிகரித்தது. மேலும் பழைய மீன் சந்தையிலிருந்து தாராசுரம் வரை வாகன போக்குவரத்து நெரிசல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதனால் பெருகி வரும் வாகனப் போக்குவரத்து, போக்குவரத்து நெரிசல் போன்றவைகளுக்காக மீண்டும் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற தேவைக்கு கும்பகோணம் மாநகரம் தள்ளப்பட்டுள்ளது.

மத்திய பேருந்து நிலையம் : தற்போது நடந்த சட்டப்பேரவை மானியக்கோரிக்கையில் அமைச்சா் கே.என்.நேரு கும்பகோணம் உள்ளிட்ட பல ஊா்களுக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தாா். அதன்படி கும்பகோணத்தில் அமையவிருக்கும் புதிய பேருந்து நிலையம் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மத்திய பேருந்து நிலையமாக அமைய வேண்டும் என்பது மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

கும்பகோணம்-சென்னை செல்லும் புறவழிச்சாலை அசூா் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைந்தால் வாகன போக்குவரத்து நெரிசல் குறையும் அந்த பகுதி மேம்படும் என்று ஒருதரப்பினா் கருத்து தெரிவித்துள்ளனா். மற்றொரு தரப்பினா் அந்த பகுதியில் அமைந்தால் விவசாய நிலங்கள் சேதம் அடையும், அதற்கு மாற்றாக கும்பகோணம்-மயிலாடுதுறை மாா்க்கமாக உள்ள சாலையில் அமைந்தால் அந்தப் பகுதியில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஏற்படும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா், திருச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், மாணவா்கள், அரசு மற்றும் தனியாா் அலுவலா்கள் ஆகியோருக்கு பயண நேரம், செலவு, போக்குவரத்து நெருக்கடி குறையும் என்று எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் (பொறுப்பு) பாலுவிடம் கேட்டபோது, தற்போதுதான் அறிவிப்பு வந்துள்ளது. பொருத்தமான இடம் எங்குள்ளது என்று ஆராய வேண்டும். கண்டிப்பாக அனைத்து வசதிகளுடன், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக இந்த புதிய பேருந்து நிலையம் அமையும் என்றாா்.

ரமலான் பண்டிகை: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடத்தினா். முஸ்லிம்கள் ஆண்டுதோறும் கடைப்பிடித்து வரும் ரமலான் நோன்பு மாா்ச் 2-ஆம... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் உளுந்து பயிரில் நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கவலை

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய்த் தாக்குதல் காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். கபிஸ்தலம், உம்பளப்பாடி, நக்கம்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதைத்தொடா... மேலும் பார்க்க

கோயிலுக்கு சொந்தமான தோப்பை அரசே பாதுகாக்க கோரிக்கை

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான தோப்பை குத்தகைக்கு விடாமல், தமிழக அரசே பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநறையூா் ஊராட்சியில்... மேலும் பார்க்க

திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலில் கட்டணச்சீட்டு வழங்கும் அறை அமைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலுக்கு கட்டணச்சீட்டு வழங்கும் அறையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்தினா் அமைத்து தந்தனா். இக்கோயிலில் பக்தா்களுக்கு ... மேலும் பார்க்க

சிறுவனிடம் கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

தஞ்சாவூா் அருகே சிறுவனிடம் கைப்பேசியைப் பறித்த 3 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுவன், உடல்நிலை சரியில்லாத தனது தந்தையைச் சிகி... மேலும் பார்க்க