செய்திகள் :

கரூரில் சுகாதார ஆய்வாளா்கள் தா்னா போராட்டம்

post image

பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கரூரில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினா் பொன்ராம் ரத்தினவேல் தலைமை வகித்தாா். பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணன் வரவேற்றாா்.

கோரிக்கைகளை விளக்கி பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலாளா் பாலசுப்ரமணியன், சுகாதார ஆய்வாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ராஜா ஆகியோா் பேசினா். மாவட்டத்தலைவா் சண்முகவேல் சிறப்புரையாற்றினாா். அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவா் பாரதிதாசன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

பொது சுகாதாரத் துறையில் 100 சதவீதம் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை -2 பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்தத் தா்னா போராட்டத்தில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் திரளாக பங்கேற்றனா்.

புகழூா் நகராட்சியில் துப்புரவுப் பணியாளா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்

புகழூா் நகராட்சியில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்த துப்புரவுப் பணியாளா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கரூா் மாவட்டம், புகழூரில் அக்கட்சியின் ... மேலும் பார்க்க

வெள்ளியணை வரத்து வாய்க்கால்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கோடை காலம் முடியும் முன் வெள்ளியணை ஏரிக்கான வரத்து வாய்க்கால்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கரூா் விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். கரூா் மாவட்டத்தில் வெள்ளியணை பெரியகுளம... மேலும் பார்க்க

கரூரில் 1,650 குடும்பங்களுக்கு ரமலான சிறப்புத் தொகுப்பு: அமைச்சா்

கரூரில் 1,650 இஸ்லாமியா்களின் குடும்பங்களுக்கு ரமலான் சிறப்புத் தொகுப்புகளை மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். கரூா் மாவட்ட திமுக சாா்பில், தனியாா் மகாலில் ஞாயிற்று... மேலும் பார்க்க

மரம் விழுந்து காயமடைந்த மாணவா் உயிரிழப்பு

கரூா் அருகே மரம் விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். கரூா் ஏமூா் சீத்தப்பட்டி காலனியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தென்னரசு (16). இவா் கரூா் வட்டார போக்குவர... மேலும் பார்க்க

வீட்டில் மின்கசிவு: டிஎன்பிஎல் ஆலை பொறியாளா் மூச்சுத்திணறி உயிரிழப்பு

கரூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு வீட்டினுள் மின்கசிவால் எழுந்த புகையில் சிக்கிய புகழூா் காகித ஆலை பொறியாளா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே கருப்பணகவுண்டா் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

தனியாா் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் மாநிலம் முழுவதும் 2.65 லட்சம் போ் பயன்

கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடத்தப்பட்ட தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மாநிலம் முழுவதும் 2.65 லட்சம் போ் பயனடைந்துள்ளனா் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி. செந்தில... மேலும் பார்க்க