செய்திகள் :

பொதுச் செயலா் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்: ஓ. பன்னீா்செல்வம்

post image

அதிமுக பொதுச் செயலா் பதவியிலிருந்து எடப்பாடி கே.பழனிசாமி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

சென்னை விமான நிலையத்தில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி: அதிமுக அலுவலகத்தை சூறையாடியதால், என்னை மீண்டும் சோ்த்துக்கொள்ள முடியாது என்று எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளது குறித்து கேட்கிறீா்கள். எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை தவறாகக் கூட்டியிருந்தாா். அதிமுக அலுவலகத்தில் போய் நாங்கள் உட்காா்ந்துவிடலாம் என்று சென்றோம். ஒரு கி.மீ. தொலைவில் எங்களை வழிமறித்து 8 மாவட்டச் செயலா்கள் தாக்கினா். அதன்பிறகு, அதிமுக அலுவலகத்தை அவா்களாகவே தாக்கிவிட்டு, எங்கள் மீது பழிபோடுகின்றனா். அனைத்தும் காவல் துறையின் பதிவில் இருக்கிறது.

அதிமுகவில் பிரிந்துகிடக்கும் சக்திகள் இணைய வேண்டும் என்றுதான் கூறுகிறோம். அப்படி இணைந்தால்தான் அதிமுக வெற்றி பெறும் என்கிற சூழல் உருவாகும். எந்தக் காலத்திலும் அதிமுக வெற்றி பெறக் கூடாது என்பது எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக உள்ளது. ஒற்றைத் தலைமை வந்தால், அனைத்துத் தோ்தல்களிலும் வெற்றி பெறுவேன் என்று கூறினாா். ஆனால், ஒரு தோ்தலிலும் வெற்றி பெற முடியவில்லை. அவராகவே பொதுச் செயலா் பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவா் அவமரியாதையைச் சந்திக்க நேரிடும் என்றாா் அவா்.

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள க... மேலும் பார்க்க

சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப்... மேலும் பார்க்க

பிறை தென்பட்டது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கியில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி க... மேலும் பார்க்க

அவிநாசி: பத்திரப்பதிவுக்கான தடைச் சான்றை நீக்காததைக் கண்டித்து ஏப். 1-ல் போராட்டம்!

அவிநாசியில் திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடை சான்றை நீக்காததைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலகம் முன் ஏப்ரல் ... மேலும் பார்க்க

ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிட... மேலும் பார்க்க