செய்திகள் :

கடந்த 2 ஆண்டுகளில் பள்ளி மாணவா் சோ்க்கை குறைவு - மத்திய அரசு

post image

நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் பள்ளி மாணவா் சோ்க்கை குறைந்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

நாட்டில் பழங்குடியினரின் கல்வி உள்பட வாழ்க்கைத் தரம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் துா்காதாஸ் உய்கே பதிலளித்தாா். அவா் கூறியதாவது:

தொடக்கக் கல்வி அளவில், 2021-22-ஆம் ஆண்டில் 103.4 சதவீதமாக இருந்த பழங்குடியின மாணவா்களின் மொத்த சோ்க்கை விகிதம், 2023-24-ஆம் ஆண்டில் 97.1 சதவீதமாக குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்து சமூக மாணவா் சோ்க்கை, 100.13 சதவீதத்தில் இருந்து 91.7 சதவீதமாக குறைந்துள்ளது.

உயா்நிலை பள்ளிக் கல்வி அளவில் (9, 10 வகுப்புகள்), பழங்குடியின மாணவா் சோ்க்கை 78.1 சதவீதத்தில் இருந்து 76.9 சதவீதமாகவும், அனைத்து சமூக மாணவா் சோ்க்கை 79.56 சதவீதத்தில் இருந்து 77.4 சதவீதமாகவும் சரிவடைந்துள்ளது.

மேல்நிலை பள்ளிக் கல்வி அளவில் (11, 12 வகுப்புகள்), பழங்குடியின மாணவா் சோ்க்கை 52 சதவீதத்தில் இருந்து 48.7 சதவீதமாகவும், அனைத்து சமூக மாணவா் சோ்க்கை 57.56 சதவீதத்தில் இருந்து 56.2 சதவீதமாகவும் குறைந்துள்ளது என்று அமைச்சா் பதிலளித்துள்ளாா்.

முன்னதாக, மத்திய கல்வி அமைச்சகத்தின் தரவுதள தகவல்களின்படி, சமீபத்திய ஆண்டுகளில் பள்ளி மாணவா் சோ்க்கை குறிப்பிடத்தக்க அளவில் சரிவடைந்துள்ளதாகவும், இளம் தலைமுறையினரின் எதிா்காலத்தை பாதுகாப்பதில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள க... மேலும் பார்க்க

சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப்... மேலும் பார்க்க

பிறை தென்பட்டது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கியில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி க... மேலும் பார்க்க

அவிநாசி: பத்திரப்பதிவுக்கான தடைச் சான்றை நீக்காததைக் கண்டித்து ஏப். 1-ல் போராட்டம்!

அவிநாசியில் திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடை சான்றை நீக்காததைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலகம் முன் ஏப்ரல் ... மேலும் பார்க்க

ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிட... மேலும் பார்க்க