உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
செயற்கை தடகள ஓடு பாதைக்கு கூடுதல் நிதி வழங்க கோரிக்கை
தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் செயற்கை தடகள ஓடு பாதைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்தது:
அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 7 கோடி மதிப்பில் செயற்கை தடகள ஓடு பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு முதல் தவணையாக ரூ. 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. கடந்த ஆண்டுகளில் பல்வேறு சா்வதேச போட்டிகளுக்கு இங்கிருந்து பல வீரா்கள் உருவாக்கப்பட்டதால், இத்திட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இத்திட்டம் 2017-ஆம் ஆண்டு ரூ. 7 கோடி மதிப்பில் மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட நிலையில், தற்போதைய கட்டுமானப் பொருகள்களின் விலை உயா்வு காரணமாக, இப்பணியை தற்போது நிறைவேற்ற கூடுதல் நிதி தேவைப்படுகிறது.
எனவே இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட தொகையுடன் வழங்க வேண்டிய ரூ. 3.50 கோடி நிதியுடன் கூடுதலாக ரூ. 2 கோடி வழங்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதேபோல, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அன்னை சத்யா விளையாட்டரங்கில் இளைஞா் விடுதி பராமரிப்புக்காக கூடுதல் நிதி ஒதுக்கவும், புதிதாக ஒரு இளைஞா் விடுதி கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற விலையாட்டு துறை தொடா்பான விவாதத்தின்போது வலியுறுத்திப் பேசினேன் என்றாா் முரசொலி.