செய்திகள் :

ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை முயற்சி; தப்புவதற்காக கீழே குதித்த இளம்பெண் படுகாயம்

post image

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்புவதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த 23 வயது பெண் படுகாயமடைந்தாா். ஹைதராபாதில் உள்ள மருத்துவமனையில் அவா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 22-ஆம் தேதி மாலை செகந்திராபாதில் இருந்து மெட்சல் பகுதிக்கு புறநகா் மின்சார ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் அந்த இளம்பெண் பயணித்துள்ளாா். அதே பெட்டியில் பயணித்த மேலும் இரு பெண்கள் அல்வால் ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டனா்.

அப்போது சுமாா் 25 வயது நபா், அந்த பெட்டியில் ஏறினாா். ரயில் புறப்பட்டதும் தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயற்சித்தாா். இதையடுத்து, அந்த நபரிடம் இருந்து தப்பிப்பதற்காக ரயில் பெட்டிக்குள் அங்கும் இங்கும் அப்பெண் ஓடினாா். எனினும், அந்த நபா் தொடா்ந்து விரட்டியதால் தப்புவதற்காக இளம்பெண் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தாா்.

அப்போது அவரின் அலறல் சத்தம் கேட்க பிற பெட்டிகளில் இருந்த பயணிகள் ரயிலின் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினா். இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு தலை, முகம், வலது கை, இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா். அவா் கீழே குதித்தபோது ரயில் சற்று மெதுவாக சென்றதால் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை.

இதனிடையே, அந்தப் பெண்ணிடம் காவல் துறையினா் விசாரணை நடத்தினா். பாலியல் வன்கொடுமை முயற்சி செய்த நபரை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்று அப்பெண் கூறினாா்.

அவா் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, ரயில் நிலைய கண்காணிப்பு கேமரா உதவியுடன் குற்றவாளியைத் தேடும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள்! ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்!

தில்லியில் 15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள், அந்த சிறுவனின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு ரூ. 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று சிறுவர்களை கைது செய்த காவல... மேலும் பார்க்க

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல்

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், அவையில் தனக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்யுள்ளார். மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டின் ஓர் அறையில் கடந்த மார்... மேலும் பார்க்க

சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 9 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டுவந்த பெண் உள்பட 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 6 பெண்கள் ... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் 21.2% பெண்கள்!

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7.8 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கு, 2024-ல் 21.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.இருப்பினும், 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (26.50%) தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

ஊழல் குற்றச்சாட்டுகளில் கல்காஜி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் ... மேலும் பார்க்க