செய்திகள் :

ராஜபாளையம்: ஆசிரமத்திற்கு வைத்த சீல் உடைப்பு; தடையை மீறி உள்ளே சென்ற நித்தியானந்தா சீடர்கள் கைது!

post image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோதை நாச்சியார்புரம் மற்றும் சேத்தூரில் நித்தியானந்தா பரமஹம்சர் ஆசிரமம் செயல்பட்டு வந்தது.

நித்தியானந்தர் சர்ச்சையில் சிக்கி வெளிநாடு சென்றதும் இந்த நிலத்தை தானமாக வழங்கிய மருத்துவர் கணேசன், பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் நிலம் தொடர்பான விவகாரத்தில் சுமுக தீர்வு எட்டுவதற்காக சந்திரன் என்பவருக்கு உரிமை வழங்கினார்.

நித்தியானந்தா ஆசிரமம்

இவருக்கும் ஆசிரம நிர்வாகிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருதரப்பினரும் நிலத்தை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது.

இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி தங்கியிருந்த சீடர்களை வட்டாட்சியர் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் வெளியேற்றினர்.

மேலும் ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்தநிலையில், நள்ளிரவில் சேத்தூர் ஆசிரமத்திற்கு சென்ற மா நித்யா சாரானந்த சாமி, மா நித்ய சுத்த ஆத்மானந்தா சாமி ஆகிய இரண்டு பெண் சீடர்கள், ஆசிரமத்திற்கு அரசு அதிகாரிகள் வைத்த 'சீல்'-ஐ உடைத்து அறைக்குள் புகுந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்ய முயன்றனர்.

நித்தியானந்தா

அப்போது பெண் சீடர்கள் இருவரும் இந்த நிலம் தங்களுக்கு தான் சொந்தம் என கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கையில் ஏர் கன்னுடன் வீடுகளில் திருட நோட்டமிட்ட இளைஞர்கள்; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்- என்ன நடந்தது?

வீடுபுகுந்து திருடுவதற்கு ஏர் கன்னுடன் சுற்றிவந்த இளைஞரை பிடித்து கிராம மக்கள் போலீஸில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்ல... மேலும் பார்க்க

'என்னை கல்யாணம் பண்ணிட்டு அவகூட ஹனிமூனா?' - கோவை விமான நிலையத்தில் இளைஞரிடம் வாக்குவாதம் செய்த பெண்!

கோவை விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து நேற்று இரவு விமானம் வந்தது. அதில் ஒரு இளம் தம்பதி வந்திருந்தனர். அண்மையில் திருமணமான அந்த தம்பதியினர் ஹனிமூனுக்காக எகிப்து சென்றுவிட்டு கோவை திரும்பியுள்ளனர... மேலும் பார்க்க

40 கேள்விகள்... 90 நிமிடங்கள்... கொடநாடு வழக்கில் ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனிடம் தீவிர விசாரணை!

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கொடநாடு கொலை கொள்ளை வழக்கு அரசியல் ரீதியாக பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கு விசரணை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு... மேலும் பார்க்க

ஊட்டி: காட்டுக்குள் கிடந்த மனித காது; பின் தொடர்ந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி - என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள கவர்னர் சோலை பகுதி தோடர் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், கேந்தர் குட்டன்‌. 40 வயதான இவர் நேற்று மாலை முதல் திடீரென காணாமல் போன நிலையில், கிராம மக்கள் அவரை தேடி அல... மேலும் பார்க்க

Nithyananda: ``கைலாசா நாடு அல்ல'' - நித்யானந்தா சீடர்கள் 20 பேரை நாடுகடத்திய பொலிவியா; காரணம் என்ன?

மத பிரசாரகர் நித்யானந்தா உருவாக்கிய கற்பனை நாடான கைலாசாவைச் சேர்ந்த 20 பேரை நாடுகடத்தியதாக பொலிவியா அரசு அறிவித்துள்ளது.பூர்வீக சமூகங்களின் நிலங்களைப் பறிக்க முயன்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8 வயது சிறுமி; போக்சோ வழக்கில் 70 வயது முதியவர் கைது!

தஞ்சாவூர் வல்லம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லம் கான் வயது 70. பள்ளியில் படிக்கின்ற எட்டு வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை அறிந்த அஸ்லம் கான் விளையாடிக் கொண்டிருந்த... மேலும் பார்க்க