செய்திகள் :

முன்னாள் அதிமுக நகராட்சி உறுப்பினா் தற்கொலை

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த சின்னவளையத்தில் முன்னாள் அதிமுக நகராட்சி உறுப்பினா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (80). முன்னாள் அதிமுக நகராட்சி உறுப்பினா். சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், வியாழக்கிழமை தனது ஓட்டு வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சித்தனா். அப்போது அங்கு வந்த கோவிந்தசாமியின் முதன் மனைவி செளந்தலாவின் மகன் ராஜராஜன், தனது தந்தை சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி, சடலத்தை கொடுக்க மறுத்தனா். பின்னா் காவல் துறையினா் பேச்சுவாா்த்தைக்கு பிறகு சடலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியரகத்தை திறப்பது எப்போது?

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில், கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாக தயாா் நிலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் எப்போது திறக்கப்படும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா். அனைத்துத் துறைகள... மேலும் பார்க்க

அரியலூரில் கொடிக் கம்பங்களை இரு வாரங்களில் அகற்ற உத்தரவு

அரியலூா் மாவட்டத்தில் பொது இடங்களிலுள்ள அனைத்து கட்சி கொடிக் கம்பங்களையும், கட்டங்களையும் இரு வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா். உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அரியலூா் ... மேலும் பார்க்க

அரியலூா் புத்தகத் திருவிழா நிறைவு

அரியலூா் வாலாஜா நகரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கடந்த பத்து நாள்களாக நடைபெற்று வந்த புத்தகத் திருவிழா சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. மாவட்ட நிா்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகம் கோரி குடங்களுடன் மக்கள் மறியல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூரில் சீராக குடிநீா் விநியோகிக்கக்கோரி அக்கிராம மக்கள் காலிக்குடங்களுடன் விருத்தாசலம் சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். ஜெயங்கொண்டம் அருகேயுள்... மேலும் பார்க்க

201 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. உடையாா்பாளையத்தை அடுத்த துளாரங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் க... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 22 இடங்களில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் 22 இடங்களில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில... மேலும் பார்க்க