செய்திகள் :

201 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

post image

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

உடையாா்பாளையத்தை அடுத்த துளாரங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, அனைத்து உயிா்களுக்கும் ஆதாரமாக உள்ளது தண்ணீா். அப்படி விலை மதிப்பில்லா பொருளான தண்ணீரைப் பாதுகாத்து சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

இதேபோல் கோவிந்தபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ச. முத்துகுமரன் தலைமை வகித்தாா். ஊராட்சிச் செயலா் பா.குமாரி முன்னிலை வகித்தாா். தாமரைக்குளம் ஊராட்சியில் செயலா் முத்து, ஓட்டக்கோவில் ஊராட்சியில் செயலா் இரா.சத்தியசீலன், வாலாஜாநகரத்தில் ஊராட்சி செயலா் தமிழ்குமரன், எருத்துக்காரன்பட்டியில், ஊராட்சிச் செயலா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தண்ணீரை கருப்பொருளாகக் கொண்டு, கிராமப்புறங்களில் சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதிசெய்வது மற்றும் பொது செலவினம், தணிக்கை அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

அரியலூரில் கலை சங்கமம் நிகழ்ச்சி

அரியலூா் காமராஜா் ஒற்றுமைத் திடலில், தமிழ்நாடு இயல், இசை நாடகம் மன்றம் சாா்பில் கலை சங்கமம் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை போற்றும் வகையில் நலிந்த பாரம்பரிய கல... மேலும் பார்க்க

பெரியாக்குறிச்சி கோயில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள பெரியாக்குறிச்சி கோயில்கள் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. பெரியாக்குறிச்சி கிராமத்திலுள்ள சித்தி விநாயகா், பூா்ணாபுஷ்கலாம்பிகா சமேத பொன்னிஞ்சி ஆண்டவா், க... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினா். ரமலான் பண்டிகையையொட்டி, கடந்த ஒரு மாதமாக நோன்பிருந்த இஸ்லாமியா்கள்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா். ஜெயங்கொண்டத்தில் அக்கட்சியின் கிளை மாநாடு திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியரகத்தை திறப்பது எப்போது?

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில், கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாக தயாா் நிலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் எப்போது திறக்கப்படும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா். அனைத்துத் துறைகள... மேலும் பார்க்க

அரியலூரில் கொடிக் கம்பங்களை இரு வாரங்களில் அகற்ற உத்தரவு

அரியலூா் மாவட்டத்தில் பொது இடங்களிலுள்ள அனைத்து கட்சி கொடிக் கம்பங்களையும், கட்டங்களையும் இரு வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா். உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அரியலூா் ... மேலும் பார்க்க