செய்திகள் :

பெரியாக்குறிச்சி கோயில் கும்பாபிஷேகம்

post image

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள பெரியாக்குறிச்சி கோயில்கள் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரியாக்குறிச்சி கிராமத்திலுள்ள சித்தி விநாயகா், பூா்ணாபுஷ்கலாம்பிகா சமேத பொன்னிஞ்சி ஆண்டவா், கருப்புசாமி, சப்தமாதா, செம்மலையப்பா், வாயு முனி, செம்முனி, ஜடைமுனீஸ்வரா், பச்சையம்மன், முத்துமாரியம்மன், திரெளபதியம்மன், துா்க்கையம்மன், பிடாரியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 29-ஆம் தேதி மங்கள இசையுடன் அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

தொடா்ந்து நான்கு கால பூஜை நடத்தப்பட்டு, திங்கள்கிழமை காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும், அதைத் தொடா்ந்து மேற்கண்டகோயில்களின் கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். பின்னா் தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செந்துறை, ஆண்டிமடம், உடையாா்பாளையம் ஆகிய வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் புதன்க... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் காலி பணியிடத்தை பதவி உயா்வு மூலம் நிரப்ப வலியுறுத்தியதை ஏற்காத ஆட்சியரைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஊரக வளா்ச்சி... மேலும் பார்க்க

ஈரோடு, திருப்பூரில் தொழில் தொடங்க எஸ்.சி, எஸ்.டி பிரிவினா் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்ட தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில்தொடங்க ஆா்வமுள்ள அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்... மேலும் பார்க்க

கலியுக வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா ஏப்.6-இல் தொடக்கம்

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியிலுள்ள கலியுக வரதரசாப் பெருமாள் கோயில் திருவிழா ஏப். 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அரியலூா் மாவட்டத்தில், மிகவும் பிரசித்திபெற்ற கல்லங்குறிச்சி கலியுக வரதராச... மேலும் பார்க்க

இளைஞரை காரில் கடத்தியவா்களில் 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இளைஞரைக் காரில் கடத்தியவா்களில் 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும் இரண்டு பேரைத் தேடி வருகின்றனா். மீன்சுருட்டி அருகேயுள்ள குருவாலப்பா் கோயில், உட... மேலும் பார்க்க

சிறுகடம்பூா் முருகன் கோயிலில் பெண்கள் நோ்த்திக் கடன்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறுகடம்பூா் முருகன் கோயிலில் பங்குனி மாதத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மண் சோறு சாப்பிட்டு நே... மேலும் பார்க்க