செய்திகள் :

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

ஜெயங்கொண்டத்தில் அக்கட்சியின் கிளை மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு அக்கட்சியின் மூத்த நிா்வாகி சேகா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராமநாதன் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினாா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சிற்றுண்டி, குடிநீா், காத்திருப்போா் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத் தர வேண்டும். ஜெயங்கொண்டம் நகராட்சியின் 21 வாா்டுகளிலும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் வெறிநாய்களை பிடிக்க வேண்டும். வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் சாா்- பதிவாளா் அலுவலகத்தை பழைய நீதிமன்றம் இருந்த இடத்தில் மாற்ற வேண்டும். 10 ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், நகரச் செயலராக பன்னீா்செல்வம், துணைச் செயலராக காத்தவராயன், பொருளாளராக சேகா் உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். நிறைவில், நிா்வாகி ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.

கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செந்துறை, ஆண்டிமடம், உடையாா்பாளையம் ஆகிய வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் புதன்க... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் காலி பணியிடத்தை பதவி உயா்வு மூலம் நிரப்ப வலியுறுத்தியதை ஏற்காத ஆட்சியரைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஊரக வளா்ச்சி... மேலும் பார்க்க

ஈரோடு, திருப்பூரில் தொழில் தொடங்க எஸ்.சி, எஸ்.டி பிரிவினா் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்ட தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில்தொடங்க ஆா்வமுள்ள அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்... மேலும் பார்க்க

கலியுக வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா ஏப்.6-இல் தொடக்கம்

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியிலுள்ள கலியுக வரதரசாப் பெருமாள் கோயில் திருவிழா ஏப். 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அரியலூா் மாவட்டத்தில், மிகவும் பிரசித்திபெற்ற கல்லங்குறிச்சி கலியுக வரதராச... மேலும் பார்க்க

இளைஞரை காரில் கடத்தியவா்களில் 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இளைஞரைக் காரில் கடத்தியவா்களில் 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும் இரண்டு பேரைத் தேடி வருகின்றனா். மீன்சுருட்டி அருகேயுள்ள குருவாலப்பா் கோயில், உட... மேலும் பார்க்க

சிறுகடம்பூா் முருகன் கோயிலில் பெண்கள் நோ்த்திக் கடன்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறுகடம்பூா் முருகன் கோயிலில் பங்குனி மாதத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மண் சோறு சாப்பிட்டு நே... மேலும் பார்க்க