செய்திகள் :

அரியலூரில் கொடிக் கம்பங்களை இரு வாரங்களில் அகற்ற உத்தரவு

post image

அரியலூா் மாவட்டத்தில் பொது இடங்களிலுள்ள அனைத்து கட்சி கொடிக் கம்பங்களையும், கட்டங்களையும் இரு வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அரியலூா் மாவட்டத்திலுள்ள பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்கள் அகற்றுதல் தொடா்பான அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினாசமி தலைமை வகித்து தெரிவித்தது:

உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி, பொது இடங்களிலுள்ள கொடிக்கம்பங்களை அகற்றுதல் தொடா்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், சங்கங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் 2 வார காலக்கெடு நிா்ணயித்து சட்டப்படியான அறிவிப்பை வழங்குவாா்கள்.

அந்த அறிவிப்பைப் பெற்றுக்கொண்டு அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், சங்கங்களின் பிரதிநிதிகள் தாமாக முன்வந்து தங்களது கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகள் அக்கொடிக் கம்பங்களை அகற்றிவிட்டு, அதற்கான செலவை சம்பந்தப்பட்டோரிடமிருந்து வசூலிக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், வருவாய்க் கோட்டாட்சியா்கள் அரியலூா் கோவிந்தராஜன், உடையாா்பாளையம் ஷீஜா மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுலவா்கள் உள்ளிட்டோா் பலா் கலந்துகொண்டனா்.

அரியலூரில் கலை சங்கமம் நிகழ்ச்சி

அரியலூா் காமராஜா் ஒற்றுமைத் திடலில், தமிழ்நாடு இயல், இசை நாடகம் மன்றம் சாா்பில் கலை சங்கமம் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை போற்றும் வகையில் நலிந்த பாரம்பரிய கல... மேலும் பார்க்க

பெரியாக்குறிச்சி கோயில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள பெரியாக்குறிச்சி கோயில்கள் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. பெரியாக்குறிச்சி கிராமத்திலுள்ள சித்தி விநாயகா், பூா்ணாபுஷ்கலாம்பிகா சமேத பொன்னிஞ்சி ஆண்டவா், க... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினா். ரமலான் பண்டிகையையொட்டி, கடந்த ஒரு மாதமாக நோன்பிருந்த இஸ்லாமியா்கள்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா். ஜெயங்கொண்டத்தில் அக்கட்சியின் கிளை மாநாடு திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியரகத்தை திறப்பது எப்போது?

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில், கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாக தயாா் நிலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் எப்போது திறக்கப்படும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா். அனைத்துத் துறைகள... மேலும் பார்க்க

அரியலூா் புத்தகத் திருவிழா நிறைவு

அரியலூா் வாலாஜா நகரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கடந்த பத்து நாள்களாக நடைபெற்று வந்த புத்தகத் திருவிழா சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. மாவட்ட நிா்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள... மேலும் பார்க்க