செய்திகள் :

செலவில்லாமல் ‘ஜிப்லி’ படங்களை உருவாக்குவது எப்படி?

post image

செலவில்லாமல் ‘ஜிப்லி’ படங்களை உருவாக்குவது எப்படி? என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

இணைதளவுலகில் எங்கும் ‘ஜிப்லி’மயமாக அலைவீசிக் கொண்டிருக்கிறது. சின்னச்சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் தன்னகத்தே இழுத்துக்கொண்டுள்ள இந்த ஜிபிலி ஸ்டைல் புகைப்படங்கள் கடந்த 40 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?

ஆம். எதுவாக இருந்தாலும் ட்ரெண்டுக்கு ஏற்றவாறு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் என்று அனைவருமே இந்த ஜிபிலி ட்ரெண்டில் இணைந்திருக்கின்றனர். இந்த வகை ட்ரெண்ட் நமது பிரதமர் முதல் எலான் மஸ்க் வரையும், ஏன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரையும் பரவியிருக்கிறது.

எங்கு தொடங்கியது இந்த ஸ்டூடியோ ஜிபிலி?

ஜப்பானிய அனிமேட்டரான ஹயாயோ மியாசாகி தான் இந்த ஸ்டூடியோ ஜிப்லி வகை அனிமேஷனுக்கு பிள்ளையார் சுழி போட்டவர். 83 வயதான ஹயாயோ மியாசாகி தனது கைவண்ணத்தின் மூலம் இதுவரை வெறும் 13 அனிமேசன் படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார்.

ஸ்டுடியோ ஜிப்லி என்பது 1985 இல் மியாசாகி ஹயோ, தகஹடா இசாவோ மற்றும் சுசுகி தோஷியோ ஆகியோரால் நிறுவப்பட்ட ஒரு ஜப்பானிய அனிமேஷன் திரைப்பட ஸ்டுடியோ ஆகும்.

அனைவரும் ஒரு திருவிழா போல கொண்டாடும் இந்த ட்ரெண்டில் நாம் இணைந்துகொள்ள வேண்டும் நினைப்பவர்கள் எவ்வாறு இந்த ஜிபிலி புகைப்படங்களை உருவாக்குவது என்பதைப் பற்றி நாம் இங்கு காண்போம்.

சாட் ஜிபிடியின் ஓபன் ஏஐ, எக்ஸின் க்ரோக் ஏஐ ஆகியவற்றின் மூலம் ஜிபிலி படங்கள் தயாரிக்கப்பட்டு இணையத்தில் வைரலாகின. இவற்றை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதைப் பற்றி காணலாம்.

இந்த ட்ரெண்டில் இணைவதற்காக பழத்தில் மொய்க்கும் ஈ போல அனைவரும் சாட் ஜிபிடியில் உலா வருவதால் பலரும் தங்களுக்கான புகைப்படங்களை மாற்றமுடியாமல் தவித்து வருகின்றனர். ஒரு மணி நேரத்துக்கும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சாட் ஜிபிடி பயன்படுத்துவதால், நாங்கள் உறக்கமில்லாமல் தவிக்கிறோம் என்று சாட் ஜிபிடி நிறுவனரே விரக்தியடைந்திருக்கிறார்.

சரி அதுபுறம் இருக்கட்டும் எவ்வாறு ஏஐ-ஐ பயன்படுத்துவது அதிலிருந்து ஜிப்லி படங்களை உருவாக்குவது என்பதைப் பற்றி ஒவ்வொரு படிநிலையாக கற்றுக்கொள்ளலாம்.

ஏஐ செயலிகள்...

படி நிலை- 1: முதலில் போன் அல்லது கணினியில் கூகுள் பிளே ஸ்டோரில் சாட் ஜிபிடி, கூகுள் ஜெமினி செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் அல்லது சாட் ஜிபிடி.காம் இணையதளத்தில் சென்று பயன்படுத்தலாம்.

படிநிலை-2: பதிவிறக்கம் செய்தபின்னர் உங்கள் கூகுள் இமெயில் முகவரியை கொடுத்து பதிவு செய்துகொள்ளவேண்டும்.

படி நிலை-3: புகைப்படங்கள் போன்று இருக்கும் ஆப்சனை கிளிக் செய்தபின்னர் photoes- என்ற ஆப்சனையும் கிளிக் செய்ய வேண்டும்.

படிநிலை-4: உங்கள் கேலரியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை அதில் பதிவேற்றிவிட்டு “Create a Studio Ghibli-style anime art” என்று பதிவிட்டு அம்புக்குறி போன்ற பொத்தானை அழுத்த வேண்டும்.

அவ்வாறு செய்துவிட்டு சிறிதுநேரம் காத்திருந்தால், அனைவரும் பயன்படுத்தும் படி நாமும் ஜிபிலி ஸ்டைல் புகைப்படங்களை உருவாக்க முடியும். [கூடுதல் தகவலாக ‘Studio Ghibli-style’ என்பதை மாற்றி நாம், goldy aura, marvel, pixar, caricature, lego போன்ற வார்த்தைகளை மாற்றி வெவ்வேறு புகைப்படங்களை நாம் பெற்றுக்கொள்ளலாம்.]

இதேபோன்ற வழிமுறையில் ஜெமினி, க்ரோக் போன்ற ஏஐ-யிலும் நாம் நமது புகைப்படங்களை மாற்றிக்கொள்ள இயலும். சாதாரண புகைப்படம் மட்டுமின்றி உங்களுக்குத் தேவையான புதிய ஸ்டைலையும் இதில் பெற்றுக்கொள்ளமுடியும்.

3 மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்! ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்பு!

3 முக்கிய மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்றுள்ளது. மத்திய ஆசியாவைச் சேர்ந்த தஜிகிஸ்தான் குடியரசு, உஸ்பெகிஸ்தான் குடியரசு மற்றும் கிர்கிஸ்தான் குடியரசு ஆகிய நாடுக... மேலும் பார்க்க

ஆட்சிக் கவிழ்ப்பின்போது கைதான முக்கிய அதிகாரிகளை விடுவித்த நைஜர் ராணுவ அரசு!

நைஜர் நாட்டின் ராணுவ அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்த முக்கிய அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளை விடுதலை செய்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு ராண... மேலும் பார்க்க

யூத மதகுருவைக் கொலை செய்த 3 பேருக்கு மரண தண்டனை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் யூத மதகுருவின் கொலை வழக்கில் கைதான 3 உஸ்பெகிஸ்தான் நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மால்டோவா மற்றும் இஸ்ரேல் நாட்டு குடியுரிமைப் பெற்றவர் ஸ்வி கோகன் (வயது 28) , இவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ரமலான் விடுமுறையினால் அகதிகளை நாடு கடத்துவதில் தாமதம்!

பாகிஸ்தானில் ரமலான் விடுமுறையினால் லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகள் நாடு கடத்தப்படுவதற்கான காலக்கெடுவானது தாமதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகளுக்கு அந்ந... மேலும் பார்க்க

உள்நாட்டு பாதுகாப்பு கருதி 2 சிறார்களைக் கைது செய்த சிங்கப்பூர்! காரணம் என்ன?

சிங்கப்பூரில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சிறுமி மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் நாட்டில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவளித்த 1... மேலும் பார்க்க

ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 2 பெண் நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மண்டலா மாவட்டத்தில் பிச்சியா காவல் நிலையத்திற்குட்பட்ட ... மேலும் பார்க்க