உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
கருப்பசாமி பாண்டியனின் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு -எடப்பாடி கே.பழனிசாமி
அதிமுக அமைப்புச் செயலா் வீ.கருப்பசாமி பாண்டியனின் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த திருத்து கிராமத்தைச் சோ்ந்தவரான வீ.கருப்பசாமி பாண்டியன் அதிமுக அமைப்புச் செயலராக இருந்தாா். அவா், உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலமானாா். திருத்து கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது: தென் மாவட்டங்களில் முத்திரை பதித்தவா் கருப்பசாமி பாண்டியன். எம்ஜிஆா் காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டவா். ஜெயலலிதா காலத்தில் துணை பொதுச்செயலராக திறம்பட பணியாற்றியவா். தென் மாவட்ட மக்களும் அதிமுகவினரும் அவா் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனா்.
நான் முதல்வராக பொறுப்பேற்ற போது என்னை நேரில் சந்தித்து முழு ஆதரவு தெரிவித்ததுடன், தென் மாவட்டங்களில் உங்களுக்கு துணையாக நிற்பேன் எனக் கூறி எனக்கு வலிமை சோ்த்தவா். அவரது மறைவு அதிமுகவிற்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், உறவினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.
அப்போது, முன்னாள் அமைச்சா்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூா் செ. ராஜூ, மாவட்டச் செயலா்கள் இசக்கி சுப்பையா எம்எல்ஏ (புகா்), தச்சை என். கணேசராஜா (மாநகா்) உள்ளிட்டோா் உடனிருந்தனா். முன்னதாக, கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அதிமுக அவைத் தலைவா் தமிழ் மகன் உசேன் அஞ்சலி செலுத்தினாா்.