செய்திகள் :

40 கேள்விகள்... 90 நிமிடங்கள்... கொடநாடு வழக்கில் ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனிடம் தீவிர விசாரணை!

post image

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கொடநாடு கொலை கொள்ளை வழக்கு அரசியல் ரீதியாக பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கு விசரணை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொடநாடு வழக்கு

அதன்படி  கொடநாடு எஸ்டேட்டின் பங்குதாரர்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருந்தது.

இதையடுத்து சுதாகரன் விசாரணைக்காக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று காலை நேரில் ஆஜரானார். விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பு அவர் வானத்தில் சூரியனை பார்த்து, சூரிய நமஸ்காரம் வைத்தபடி உள்ளே சென்றார்.

சுதாகரன்

அங்கு சுதாகரனிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் மாதவன்,  கூடுதல் கண்காணிப்பாளர் முருகவேல், துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்ட சிபிசிஐடி குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுதாகரன், “என்னிடம் 40 கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு எனக்கு தெரிந்த பதில்களை தெரிவித்துள்ளேன். காவல்துறையினர் கேட்ட கேள்விக்கு எனக்கு தெரிந்த உண்மைகளை தெளிவாக கூறிவிட்டேன்.  தற்போதுதான் முதன்முறையாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளேன்.

சுதாகரன்

விசாரணை தீவிரமடைந்துள்ளதா.. உண்மை வெளிவருமா என்று எனக்கு தெரியவில்லை. விசாரணை முறையாக நடைபெறுகிறதா என்பதை நீங்கள் கேட்க வேண்டிய இடத்தில் கேளுங்கள்.” என்று கூறினார்.

"தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன்" - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன... மேலும் பார்க்க

காவலர் கொலையில் 3 பேர் சிறையில் அடைப்பு; சுடப்பட்ட குற்றவாளிக்குத் தீவிர சிகிச்சை

உசிலம்பட்டியில் போலீஸ்காரர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.சுடப்பட்ட பொன்வண்ணன்மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்... மேலும் பார்க்க

வீட்டில் ஸ்டூடியோ; மாடல்களுக்கு லட்சத்தில் சம்பளம்; ஆபாச வீடியோ நெட்வொர்க்கை இயக்கிய நொய்டா தம்பதி!

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் சட்டவிரோதமாக ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிடப்படுவதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நொய்டாவில் உள்ள உஜ்வால் என்பவரத... மேலும் பார்க்க

உசிலம்பட்டி போலீஸ் கொலை வழக்கு: கேரளா தப்ப முயன்ற ரௌடி சுட்டுப் பிடித்த போலீஸார் - நடந்தது என்ன?

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் முத்துக்குமார் (40). இவர் கடந்த 2009-ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்து, தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளருக்கு டிரைவராக பணிய... மேலும் பார்க்க

பிரபல ரௌடி அசோக்கைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்.. செங்கல்பட்டு வனப்பகுதியில் நடந்ததென்ன?

செங்கல்பட்டு அருகே உள்ள திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (30). இவர் ஏ பிளஸ் ரௌடி. சிறையிலிருந்து வெளியில் வந்த அசோக்கை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அசோக் தலைமையிலான ரௌடி டீம், தி.மு... மேலும் பார்க்க

சென்னை: மருத்துவ மாணவிக்குப் பாலியல் தொல்லை - மாணவனைத் தேடும் போலீஸ்!

சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் எம்.டி.எஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார் 26 வயது மாணவி ஒருவர். இவர் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், அதே கல்லூரியில் படி... மேலும் பார்க்க