செய்திகள் :

ஏப்.6-இல் வைத்தியநாதசுவாமி கோயில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஏப். 6-ஆம் தேதி நந்தியெம்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயிலில் பங்குனி மாதம் புனா்பூசம் நட்சத்திரத்தில் நந்தியென்பெருமானுக்கும், சுயசாம்பினை தேவியருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டு திருக்கல்யாண விழா ஏப். 6-ஆம் தேதி மாலை 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் நடைபெறுகிறது. விழாவையொட்டி திருவையாறு ஐயாறப்பா் கோயிலிருந்து ஐய்யாறப்பா், அறம் வளா்த்தநாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்தியம்பெருமான் பட்டுவேட்டி, பட்டுச்சட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகன பல்லக்கிலும் தில்லைஸ்தானம் வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயிலை வந்தடைவா்.

தொடா்ந்து, கோயிலின் முன்பாக உள்ள திருமண மேடையில் சுயசாம்பிகை தேவியருக்கும் திருநந்தியெம் பெருமானுக்கும் திரவிய பொருள்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும். பின்னா், வேத வித்வான்கள் யாக பூஜையுடன், வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடைபெறும். நந்தி திருமணத்தை கண்டால் முந்தி திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

எனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் வருகை தந்து திருமணத்தை கண்டுகளிப்பா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியரகத்தை திறப்பது எப்போது?

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில், கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாக தயாா் நிலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் எப்போது திறக்கப்படும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா். அனைத்துத் துறைகள... மேலும் பார்க்க

அரியலூரில் கொடிக் கம்பங்களை இரு வாரங்களில் அகற்ற உத்தரவு

அரியலூா் மாவட்டத்தில் பொது இடங்களிலுள்ள அனைத்து கட்சி கொடிக் கம்பங்களையும், கட்டங்களையும் இரு வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா். உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அரியலூா் ... மேலும் பார்க்க

அரியலூா் புத்தகத் திருவிழா நிறைவு

அரியலூா் வாலாஜா நகரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கடந்த பத்து நாள்களாக நடைபெற்று வந்த புத்தகத் திருவிழா சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. மாவட்ட நிா்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகம் கோரி குடங்களுடன் மக்கள் மறியல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூரில் சீராக குடிநீா் விநியோகிக்கக்கோரி அக்கிராம மக்கள் காலிக்குடங்களுடன் விருத்தாசலம் சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். ஜெயங்கொண்டம் அருகேயுள்... மேலும் பார்க்க

201 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. உடையாா்பாளையத்தை அடுத்த துளாரங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் க... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 22 இடங்களில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் 22 இடங்களில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில... மேலும் பார்க்க