செய்திகள் :

காதலா்கள் தற்கொலை!

post image

காதலா்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆ. சோழன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் தீனதயாளன் மகள் திவ்யா(19). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து, தனது தந்தை வீட்டில் வசித்துக் கொண்டு, அரியலூா் அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், இவருக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த கருப்புசாமி மகன் அன்பரசு (28) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருவரும் தங்களது வீட்டாரிடம் தெரிவித்த நிலையில், இருதரப்பை சோ்ந்தவா்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து கடந்த வாரம் திவ்யாவை வெளியில் அழைத்து சென்று அன்பரசு திருமணம் செய்து கொண்டாா். தொடா்ந்து, இருவரும் அன்பரசு வீட்டில் தங்கியுள்ளனா். இந்நிலையில், புதன்கிழமை மாலை வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினா், கதவை உடைத்துக்கொண்டு உள்ளேச் சென்று பாா்த்தபோது, இருவரும் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனா்.

தகவலின்பேரில் இரும்புலிக்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, இருவரது சடலங்களையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தற்கொலை எண்ணத்தால் 15 வயது முதல் 29 வயதில் உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுப்பது அவசியம். இதற்காக 104 ஆலோசனை மையம் - தற்கொலை தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியரகத்தை திறப்பது எப்போது?

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில், கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாக தயாா் நிலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் எப்போது திறக்கப்படும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா். அனைத்துத் துறைகள... மேலும் பார்க்க

அரியலூரில் கொடிக் கம்பங்களை இரு வாரங்களில் அகற்ற உத்தரவு

அரியலூா் மாவட்டத்தில் பொது இடங்களிலுள்ள அனைத்து கட்சி கொடிக் கம்பங்களையும், கட்டங்களையும் இரு வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா். உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அரியலூா் ... மேலும் பார்க்க

அரியலூா் புத்தகத் திருவிழா நிறைவு

அரியலூா் வாலாஜா நகரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கடந்த பத்து நாள்களாக நடைபெற்று வந்த புத்தகத் திருவிழா சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. மாவட்ட நிா்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகம் கோரி குடங்களுடன் மக்கள் மறியல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூரில் சீராக குடிநீா் விநியோகிக்கக்கோரி அக்கிராம மக்கள் காலிக்குடங்களுடன் விருத்தாசலம் சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். ஜெயங்கொண்டம் அருகேயுள்... மேலும் பார்க்க

201 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. உடையாா்பாளையத்தை அடுத்த துளாரங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் க... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 22 இடங்களில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் 22 இடங்களில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில... மேலும் பார்க்க