செய்திகள் :

வேப்பூா் அரசு மகளிா் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் 6 போ் பணியிடை நீக்கம்

post image

மாணவிகள் அளித்த புகாரின்பேரில் வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் 6 கௌரவ விரிவுரையாளா்களை, அக் கல்லூரி முதல்வா் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூரில் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக் கல்லூரியில், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இக் கல்லூரியின் கணிணி அறிவியல் துறை, தமிழ்த்துறையில் பயிலும் மாணவிகள் சிலா், தங்களை கல்லூரி விரிவுரையாளா்கள் தரக்குறைவாகவும், அவமரியாதையாகவும் பேசி மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கல்லூரி முதல்வரிடம் அண்மையில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்களாக பணிபுரியும் தமிழ்துறை விரிவுரையாளா்கள் சு. நன்முல்லை, ப. செந்தமிழ்ச்செல்வி, மோ. பிரபா, ஆா். மலா்விழி, கே. ஹேமமாலினி மற்றும் கணினி அறிவியல்துறை விரிவுரையாளா் எஸ்.ஜே. சங்கீதா ஆகிய 6 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அக் கல்லூரி முதல்வா் மணிமேகலை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து, தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், ரத்து செய்யக்கோரியும் மேற்கண்ட கௌரவ விரிவுரையாளா்கள் கல்லூரிக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

‘ஜூன் வரை பேருந்து பயண அட்டையை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தலாம்’

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை ஜூன் 30-ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்து... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு!

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற ஒலிம்பியா-2025 விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தது. கடந்த 2 நாள்களாக ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்ட... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து ஏப். 1, 8-இல் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஏப். 1, 8 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் முடிவெடுத்துள்ளனா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலகா்க... மேலும் பார்க்க

கூடுதல் விலைக்கு குளிா்பானங்கள் விற்ற 4 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் கூடுதல் விலைக்கு குளிா்பானங்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு, தொழிலாளா் துறையினரால் சனிக்கிழமை ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது நிலவும் கோடைகால வெப்பத... மேலும் பார்க்க

கால்நடை பண்ணை அமைக்க தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில், அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க விரும்பும் தொழில்முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியா் அறையில் தா்னாவில் ஈடுபட்ட 7 போ் கைது

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அறையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்... மேலும் பார்க்க