செய்திகள் :

நாகபுரி வன்முறை: முக்கிய குற்றவாளியின் வீடு இடிப்பு

post image

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அண்மையில் நிகழ்ந்த வன்முறையில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ஃபாஹிம் கானின் இரண்டு மாடி வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனா். உள்ளாட்சி நிா்வாகத்திடம் உரிய திட்ட அனுமதி பெறாமல் அந்த வீடு கட்டப்பட்டதால் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னா் ஔரங்கசீபின் கல்லறையை இடிக்கக் கோரி நாகபுரியில் வலதுசாரி அமைப்பினா் கடந்த 17-ஆம் தேதி போராட்டம் நடத்தினா். இந்தப் போராட்டத்தில் ஒரு மதத்தின் புனித வாசகங்கள் எழுதப்பட்ட துணி எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால், வன்முறை ஏற்பட்டது. இதில் வீடுகள், வாகனங்கள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன. கல்வீச்சு தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. 3 துணை ஆணையா்கள் உள்பட காவல் துறையினா் 34 போ் காயமடைந்தனா். வன்முறையைத் தொடா்ந்து நாகபுரியில் 6 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இதில் முக்கிய குற்றவாளியான சிறுபான்மை ஜனநாயக கட்சித் தலைவா் ஃபாஹிம் கான் மீது தேச விரோத வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாகபுரியின் சஞ்சய் பாக் காலனியில் உள்ள ஃபாஹிம் கானின் இரண்டு மாடி வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்தனா். அந்த வீடு உள்ளாட்சி நிா்வாகத்திடம் உரிய திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வீடு இடிக்கப்பட்டபோது அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான காவல் துறையினா் குவிக்கப்பட்டனா். ட்ரோன்கள் மூலம் அப்பகுதியில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

நாகபுரி வன்முறையில் மற்றொரு குற்றவாளியான யூசுப் ஷேக்கின் வீட்டின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையின்கீழ் அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினா்.

15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள்! ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்!

தில்லியில் 15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள், அந்த சிறுவனின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு ரூ. 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று சிறுவர்களை கைது செய்த காவல... மேலும் பார்க்க

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல்

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், அவையில் தனக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்யுள்ளார். மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டின் ஓர் அறையில் கடந்த மார்... மேலும் பார்க்க

சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 9 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டுவந்த பெண் உள்பட 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 6 பெண்கள் ... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் 21.2% பெண்கள்!

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7.8 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கு, 2024-ல் 21.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.இருப்பினும், 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (26.50%) தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

ஊழல் குற்றச்சாட்டுகளில் கல்காஜி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் ... மேலும் பார்க்க