செய்திகள் :

புனேவில் 3 வயது மகனைக் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை

post image

புனே சந்தன் நகரில் வசித்தவர் மாதவ் திகேதி (38). இவரது மனைவி ஸ்வரூபா. இவர்களுக்கு ஹிம்மத் மாதவ் என்ற 3 வயது மகன் இருந்தார்.

ஆந்திரா மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்தவர்களான இத்தம்பதி இடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்தது.

வழக்கம்போல் மார்ச் 22 ஆம் தேதி மாலை மீண்டும் கணவன், மனைவி இடையே இதே பிரச்னையில் தகராறு ஏற்பட்டது.

சண்டை முற்றிய நிலையில் மாதவ் தனது 3 வயது மகனை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

அவர் தனது மகனுடன் அங்குள்ள பீர் பார் ஒன்றில் அமர்ந்து மது அருந்தினார். பின்னர் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றுவிட்டு தனது மகனுடன் அங்குள்ள வனப்பகுதிக்குச் சென்றார்.

3 வயது மகன்

மாதவ் வீட்டை விட்டு வெளியில் சென்று நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த ஸ்வரூபா இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.

போலீஸார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் தேடினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பிற்பகல் 2.30 மணிக்கு மாதவ் தனது மகனுடன் இருந்த காட்சிப் பதிவாகி இருந்தது.

ஆனால் மாலை 5 மணிக்குப் பதிவான காட்சியில் மாதவுடன் அவரது மகன் இல்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீஸார் மாதவ் எங்கு இருக்கிறார் என்பதை அவரது மொபைல் போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்தனர்.

அவர் ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கி இருப்பது தெரிய வந்தது. போலீஸார் அங்குச் சென்றபோது மாதவ் மது குடித்துக்கொண்டிருந்தார்.

அவரைப் பிடித்து சென்று விசாரித்தபோது அவரால் சரியாகப் பேச முடியவில்லை. அவர் சகஜ நிலைக்கு வந்தபிறகு அவரிடம் விசாரித்தபோது மகன் ஹிம்மத்தைக் கொலை செய்து வனப்பகுதியில் போட்டு இருப்பது தெரிய வந்தது.

murder
murder

இதையடுத்து மாதவை அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது அங்கு மாதவ் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

குழந்தையின் உடலை மீட்டு மாதவைக் கைது செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

கையில் ஏர் கன்னுடன் வீடுகளில் திருட நோட்டமிட்ட இளைஞர்கள்; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்- என்ன நடந்தது?

வீடுபுகுந்து திருடுவதற்கு ஏர் கன்னுடன் சுற்றிவந்த இளைஞரை பிடித்து கிராம மக்கள் போலீஸில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்ல... மேலும் பார்க்க

'என்னை கல்யாணம் பண்ணிட்டு அவகூட ஹனிமூனா?' - கோவை விமான நிலையத்தில் இளைஞரிடம் வாக்குவாதம் செய்த பெண்!

கோவை விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து நேற்று இரவு விமானம் வந்தது. அதில் ஒரு இளம் தம்பதி வந்திருந்தனர். அண்மையில் திருமணமான அந்த தம்பதியினர் ஹனிமூனுக்காக எகிப்து சென்றுவிட்டு கோவை திரும்பியுள்ளனர... மேலும் பார்க்க

40 கேள்விகள்... 90 நிமிடங்கள்... கொடநாடு வழக்கில் ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனிடம் தீவிர விசாரணை!

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கொடநாடு கொலை கொள்ளை வழக்கு அரசியல் ரீதியாக பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கு விசரணை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு... மேலும் பார்க்க

ஊட்டி: காட்டுக்குள் கிடந்த மனித காது; பின் தொடர்ந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி - என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள கவர்னர் சோலை பகுதி தோடர் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், கேந்தர் குட்டன்‌. 40 வயதான இவர் நேற்று மாலை முதல் திடீரென காணாமல் போன நிலையில், கிராம மக்கள் அவரை தேடி அல... மேலும் பார்க்க

Nithyananda: ``கைலாசா நாடு அல்ல'' - நித்யானந்தா சீடர்கள் 20 பேரை நாடுகடத்திய பொலிவியா; காரணம் என்ன?

மத பிரசாரகர் நித்யானந்தா உருவாக்கிய கற்பனை நாடான கைலாசாவைச் சேர்ந்த 20 பேரை நாடுகடத்தியதாக பொலிவியா அரசு அறிவித்துள்ளது.பூர்வீக சமூகங்களின் நிலங்களைப் பறிக்க முயன்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8 வயது சிறுமி; போக்சோ வழக்கில் 70 வயது முதியவர் கைது!

தஞ்சாவூர் வல்லம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லம் கான் வயது 70. பள்ளியில் படிக்கின்ற எட்டு வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை அறிந்த அஸ்லம் கான் விளையாடிக் கொண்டிருந்த... மேலும் பார்க்க