செய்திகள் :

தில்லியில் சம்பளம் கொடுக்காததால் சக ஊழியரைக் கொன்ற சகோதரர்கள் கைது

post image

சம்பளம் கொடுக்காததால் சக ஊழியரைக் கொலை செய்ததாக இரண்டு சகோதரர்களை தில்லி போலீஸார் கைது செய்தனர்.

தலைநகர் தில்லியில், சராய் ரோஹில்லாவின் ஹரிஜன் பஸ்தியில் உள்ள ரயில் பாதை அருகே கடந்த 17ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸார், தலையில் காயமடைந்த நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இறந்தவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மல்கான் (31) என்பது அடையாளம் காணப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணையில் இறங்கினர்.

சசிகலா, ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை: இபிஎஸ் உறுதி

55க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த பிறகு, ஆனந்த் பர்பத் பகுதியில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட மோனு (24) மற்றும் யோகேந்தர் (33) ஆகியோரை மார்ச் 18 ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மல்கானை இருவரும் கொன்றதை ஒப்புக்கொண்டனர் என்று போலீஸார் கூறினர்.

குற்றம்சாட்டப்பட்ட இருவரும் மல்கானுடன் இணைந்து ஓவியர்களாக வேலை செய்ததாகவும், சம்பளம் வழங்காததால் ஆத்திரமடைந்த இருவரும், மல்கானை செங்கலால் தாக்கியதில் பலியானார் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க

'நீதிமன்றம் குப்பைத்தொட்டி அல்ல' - நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இன்று(மார்ச் 25) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மாா்ச் 14-ஆம் ... மேலும் பார்க்க

8 ஆண்டுக்கால முன்னேற்றம்: யோகி அரசைப் பாராட்டிய அமைச்சர்!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் எட்டு ஆண்டுக்கால நிறைவைக் குறித்து அந்த மாநில அமைச்சர் ஏ.கே. சர்மா பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய சர்மா, யோக... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் ஆக்கிரமிப்பை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும்: இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் சில பகுதிகளை சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருப்பதாகவும் அவற்றை உடனடியாக காலி செய்ய வேண்டும் என ஐ.நா. கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமைதி ... மேலும் பார்க்க