செய்திகள் :

8 ஆண்டுக்கால முன்னேற்றம்: யோகி அரசைப் பாராட்டிய அமைச்சர்!

post image

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் எட்டு ஆண்டுக்கால நிறைவைக் குறித்து அந்த மாநில அமைச்சர் ஏ.கே. சர்மா பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய சர்மா,

யோகி ஆதித்யநாத் அரசின் கீழ் மாநிலத்தின் எட்டு ஆண்டுக்கால நல்லாட்சிக்காக உத்தரப் பிரதேச மக்களை நான் வாழ்த்துகிறேன். கடந்த எட்டு ஆண்டுகளில் பொதுநலன் மற்றும் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், சேவைகளை நெறிப்படுத்தவும், பொறுப்புணர்வை உறுதி செய்யவும் நிர்வாகம் மேற்கொண்ட முறைகளையும் அவர் எடுத்துரைத்தார்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு உள்பட ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இது மாநிலத்தில் தொழில்துறை வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த எட்டு ஆண்டுகளில், ஒவ்வொரு துறையிலும் மாநிலம் முன்னேறியுள்ளது. அரசின் கீழ் உள்கட்டமைப்பு மேம்பாடும் செய்யப்பட்டுள்ளது. தொழில்துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது .

பிரயாக்ராஜில் சமீபத்தில் நடைபெற்ற, நகர்ப்புற மேம்பாட்டுத் துறையால் நிர்வகிக்கப்பட்ட மகா கும்பமேளாவைப் பற்றி சர்மா பெருமிதம் அடைந்தார். கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்த நிகழ்வால், உத்தரப் பிரதேசத்திற்கு மேலும் பெருமை சேர்த்தது என்று அவர் கூறினார்.

முன்னதாக திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது அரசின் எட்டு ஆண்டுக்கால பதவிக் காலத்தைக் குறிக்கும் வகையில், நலிந்த மாநிலத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வளர்ச்சி இயந்திரமாக மாற்றியுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து உத்தரப் பிரதேசத்தின் மேம்பட்ட பாதுகாப்பு சூழலுக்கு பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவின் வெற்றிகரமான ஏற்பாட்டை அவர் மேற்கோள் காட்டினார்.

நேற்று யோகி ஆதித்யநாத் அரசின் எட்டு ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் லக்னௌவில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, அமைச்சர் பிரஜேஷ் பதக், அமைச்சர் சௌத்ரி பூபேந்திர சிங் மற்றும் பல அமைச்சர்கள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டின் ஓர் அறையில் கடந்த மார்... மேலும் பார்க்க

சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 9 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டுவந்த பெண் உள்பட 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 6 பெண்கள் ... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் 21.2% பெண்கள்!

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7.8 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கு, 2024-ல் 21.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.இருப்பினும், 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (26.50%) தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

ஊழல் குற்றச்சாட்டுகளில் கல்காஜி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் ... மேலும் பார்க்க

'பாஜகவுக்கு ராகுல் காந்தி உதவுகிறார்' - யோகி ஆதித்யநாத்

ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் பாதையை தெளிவுபடுத்துவதற்கு அவர் உதவுவதாகவும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர்... மேலும் பார்க்க

மனிதாபிமானமற்ற அணுகுமுறை! அலாகாபாத் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

குழந்தையின் மார்பகங்களைப் பிடிப்பது, பைஜாமா நாடாவை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றத்தின் கீழ் வராது என்ற அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தர... மேலும் பார்க்க