செய்திகள் :

சசிகலா, ஓபிஎஸ், தினகரனை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி

post image

அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ், தினகரனை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சேலத்தில் அவர் செய்தியாளர்களுடான சந்திப்பில் பேசுகையில்,

2025-26 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் தேர்தலுக்கான அறிவிப்புகள் மட்டுமே. திமுக அரசுக்கு இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் எதையும் இவர்களால் செயல்படுத்த முடியாத நிலையே உள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் போடப்பட்டு, அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணி செய்யவது என இயலாத காரியம். எனவே அறிவிக்கப்பட்டுள்ள அத்தனை அறிவிப்புகளும் தேர்தலுக்காக, வாக்குகளை பெறுவதற்காக ளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களாகவே பார்க்கப்படும்.

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது என குற்றம்சாட்டியுள்ளார்.

விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு என இப்படி எல்லா வகையிலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நிதிநிலை அறிவிப்பு வெறும் நாடகம்.

நாடாளுமன்ற தொகுதி மறுவரை தொடர்பாக தில்லியில் திமுக உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

இதில் காங்கிரஸ் கலந்து கொண்டிருந்தால் திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி பலன் அளிக்கும் என்று எண்ணலாம். திமுக அரசின் ஊழல்களில் இருந்து மக்களை திசை திருப்பவே தொகுதி மறுவரைக்கு எதிரான கூட்டத்தை நடத்தியுள்ளனர் என கூறினார்.

சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா?: ராமதாஸ் கேள்வி

சசிகலா,ஓபிஎஸ், தினகரனை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை.

மேலும், அதிமுக மிக சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், சசிகலா, ஓபிஎஸ், தினகரனை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அது குறித்து முடிவு எடுக்கப்படும்.

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். கொள்கை வேறு, கூட்டணி வேறு. கொள்கை எப்பொழுதும் நிலையானது; கூட்டணி தேர்தலுக்கு தேர்தல் மாறக்கூடியது. எதிரிகளை வீழ்த்தும் வகையில் யூகம் அமைத்து கூட்டணி அமைக்கப்படும்.

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இன்று மட்டுமே அனைவருக்கும் நிச்சயம். நாளை என்பது கேள்விக்குறிதான் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

யேமன்: ஹவுதி படைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் 2 பேர் பலி!

யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் 2 பேர் பலியாகினர்.யேமன் நாட்டில் ஹவுதி படையினரின் தளங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவத்தினர் இன்று (மார்ச் 25) அதிகாலை... மேலும் பார்க்க

ஐபிஎல்: கடைசி ஓவரில் தில்லி கேபிடல்ஸ் த்ரில் வெற்றி!

விசாகப்பட்டினம்: நடப்பு ஐபிஎல் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் இலக்கைதில்லி கேபிடல்ஸ் 19.3 ஓவர்களில் எட்டி முதல் வெற்றி... மேலும் பார்க்க

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா? - அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச... மேலும் பார்க்க

டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம்: விக்ரமராஜா

சேலம் : டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். சேலம் ... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி நாளை ஆலோசனை

சென்னை: தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா்.த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: விஜய்

சென்னை: பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம... மேலும் பார்க்க