செய்திகள் :

நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

post image

நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று காலை கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கடந்த வாரம் வெய்யில் கொளுத்திவந்த நிலையில், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்பட்ட நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக ஒரு மணி நேரத்துக்கு மேலாகக் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்துச் சென்றதால் இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டனர்.

இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் மதியம் 12 மணியளவில் மழை பெய்யத் தொடங்கி தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஏற்கனவே பாபநாசம் சேர்வலாறு மணிமுத்தாறு உள்பட அனைத்து அணைகளிலும் போதுமான அளவுக்குத் தண்ணீர் இருக்கிறது. மேலும் இன்று பெய்த மழையால் நீர்மட்டம் மேலும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

மானியத்தில் கால்நடை பண்ணைகள்: தமிழக அரசு அழைப்பு

மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடா்பாக, மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கால்நடைகளின் எண்ணிக்கையை உயா்த்தவும் தொழில்முனைவோரை உ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு ஆட்சியருக்கு பிடியாணை: உயா்நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவுக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

மாநிலங்கள் உதய தினத்தை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

மாநிலங்கள் உருவான தினத்தை ஆளுநா் மாளிகையில் நடத்தினால் மட்டும் போதாது, அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி தெரிவித்தாா். சென்னை, கிண்டி ... மேலும் பார்க்க

கோயில் கட்டுமானப் பணிகளில் தரம்: அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்தல்

கோயில் கட்டுமானத் தரத்தில் எவ்விதத்திலும் குறைவும் ஏற்படாத வகையில் சிறந்த முறையில் பணிகள் நடைபெறுவதற்கு பொறியாளா்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்... மேலும் பார்க்க

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாக பதிவா?

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிஎஸ் 4 ரக வாகனங்கள் கடந்த 202... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது: ஜி.கே.வாசன்

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடத்திய கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ப... மேலும் பார்க்க