செய்திகள் :

மானியத்தில் கால்நடை பண்ணைகள்: தமிழக அரசு அழைப்பு

post image

மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடா்பாக, மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கால்நடைகளின் எண்ணிக்கையை உயா்த்தவும் தொழில்முனைவோரை உருவாக்கவும் புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில் நாட்டு கோழி பண்ணையுடன்கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ. 25 லட்சம் வரையும், செம்மறி ஆடுவெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலும், பன்றி வளா்ப்புப் பண்ணை அமைக்க ரூ.15 முதல் ரூ.30 லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் தனிநபா், சுய உதவிக் குழுக்கள், விவசாய உற்பத்தியாளா்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டுப் பொறுப்பு சங்கங்கள், ஆகியன விண்ணப்பிக்க தகுதியானவா்கள்.

இதுகுறித்து முழுமையான விவரங்களை இணையதளத்தில் அறியலாம். மேலும், விவரங்களுக்கு கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை மருத்துவா்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள், அருகிலுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலா்கள், தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை அலுவலா்கள் ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுள் சரியாகத்தான் இருக்கிறார்; சில மனிதர்கள்தான் சரியில்லை: நீதிபதிகள்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில், கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பார்க்க

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் ... மேலும் பார்க்க

தமிழக எம்பிக்களுடன் பிரதமரைச் சந்திக்க முடிவு: முதல்வர் ஸ்டாலின்

நியாயமான தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்களுடன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், நியாயமா... மேலும் பார்க்க

மெட்ரோ தூணில் மோதி விபத்து: சேப்பாக்கத்தில் இருந்து திரும்பிய மாணவர்கள் பலி!

சென்னை: சென்னை ஆலந்தூர் அருகே மெட்ரோ தூணில் இருசக்கர வாகனம் மோதியதில் இரண்டு கல்லூரி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பலியாகினர்.இருவரும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை கண்டுவிட்டு, வீடு த... மேலும் பார்க்க

மதுரை: காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் சுட்டுப் பிடிப்பு!

மதுரை அருகே தனிப்படைக் காவலர் மலையரசன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவரைக் காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர்.விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள முக்குளம் அழகாபுரி கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளுடன் இன்று தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை!

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்தும் பொருட்டு, அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா். தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத... மேலும் பார்க்க