செய்திகள் :

`முன்னிறுத்தப்பட்ட இந்தி; புறக்கணிக்கப்பட்ட கன்னட மொழி' - வைரலாகும் பெங்களூர் RSS நிகழ்ச்சி

post image

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கலந்துகொண்டு தலைமைதாங்கினர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே செய்தியாளர்களிடம் பேசினார்.

மோகன் பகவத்

அப்போது, ,``இந்தியாவின் நெறிமுறைகளுக்கு எதிரான ஒருவரை நாம் சின்னமாக்கப் போகிறோமா? படையெடுப்பு மனநிலை கொண்டவர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல். சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட ஔரங்கசீப்பின் சகோதரர் தாரா ஷிகோவை விட ஔரங்கசீப்தான் ஒரு அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்தப்பட்டால், அது ஒரு சுதந்திரப் போராட்டம். அவர்களுக்கு முன் இருந்தவர்களுக்கு எதிரான போராட்டமும் ஒரு சுதந்திர இயக்கமாகும். இது மதத்தைப் பற்றிய முடிவல்ல. ஆர்.எஸ்.எஸ்-ஸின் உறுதியான பார்வையும் இதுதான். வக்ஃப்பிற்காக அரசு ஒரு ஆணையத்தை அமைத்துள்ளது. இதுவரை அரசின் செயல்பாடுகள் சரியாகத்தான் செல்கிறது. இதற்குப் பிறகு அவர்களின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்." என்றார்.

Dattatreya Hosabale

இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே சமூக வலைதளங்களில் கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டது தொடர்பான விவாதம் நடந்துவருகிறது. இந்த நிகழ்வில் வைக்கப்பட்ட பதாகைகள் அனைத்தும் இந்தி மொழியிலேயே இருந்தது. கன்னடப் பலகைகள் இல்லாதது சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினைகளைத் ஏற்படுத்தியிருக்கிறது. மாநில மொழிகளைப் புறக்கணித்து இந்தியை ஆர்.எஸ்.எஸ் ஊக்குவிப்பதாகக் கண்டித்துள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``ஆண்களுக்கான கேன்சர் பரிசோதனை; இனி வீட்டிலேயே செய்யலாம்'' - ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

கேன்சரில் பல வகைகள் இருக்கின்றன. அந்த வகையில், ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடிய கேன்சர்களில் இரண்டாவது இடம் புராஸ்ட்டேட் கேன்சருக்குத்தான். எந்த உடல் பாகத்தில் கேன்சர் வருகிறதோ, அதன் பெயராலேயே கேன்சரை குற... மேலும் பார்க்க

US: ``வெனிசுலா உடன் வணிகம் செய்தால் 25% வரி!'' - ட்ரம்பின் புது அதிரடி; இந்தியாவை பாதிக்குமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'எந்த நாடுகள் வெனிசுலா நாட்டிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குகிறதோ, அந்த நாடுகளின் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படும்' என்று நேற்று எச்சரித்துள்ளார். இதுக்குறித்து தனது... மேலும் பார்க்க

``தமிழ் பண்பாட்டை ஆளுநர் ரவி அழகாக பாதுகாக்கிறார்'' - பார்த்திபன் பேசியது என்ன?

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார். நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீட்டில் கொட்டப்பட்ட கழிவுநீர், தாக்குதல்.. - திருமா, இ.பி.எஸ் கண்டனம்

நேற்று யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டின் பின்பக்க கதவு வழியாக சிலர் புகுந்து, வீட்டிற்குள் கழிவு நீர் போன்றவற்றை கொட்டியுள்ளனர். மேலும், அவரது வீட்டில் இருந்த பொருள்களை அடித்து உடைத்துள்ளனர். சவுக்கு ... மேலும் பார்க்க

மந்தி பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம் நாகர்கோவில் ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் லியாகத் என்ற பெயரில் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம்... மேலும் பார்க்க

Parliament: பதாகைகளை ஏந்தி எதிக்கட்சிகள் கடும் அமளி; மக்களவை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வார விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. மக்களவையிலும் - மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களவையில், தொகுதி மறு சீர... மேலும் பார்க்க