செய்திகள் :

மந்தி பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம் நாகர்கோவில் ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

post image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் லியாகத் என்ற பெயரில் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம் 20 மந்தி பிரியாணி மற்றும் சிக்கன் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.

பிரியாணி மற்றும் சிக்கனை வீட்டிற்கு கொண்டு சென்று இரவு குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். பிரியாணி சாப்பிட்ட சில மணி நேரத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து சிலர் மயக்க நிலைக்குச் சென்றுள்ளனர்.

சீல் வைக்கப்பட்ட ஹோட்டல்

3-குழந்தைகள் 4-பெண்கள் உள்பட 17-பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

குளச்சல் தனியார் மருத்துவமனையி 15-பேரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மனையில் 2-பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு குழந்தைகள் உடல் நடுக்கத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் லியாகத் ஹோட்டலில் இன்று ஆய்வு  மேற்கொண்டனர். உணவின் தரம் குறைவாக இருந்ததால் சீல் வைத்தனர்.

பிரியாணி சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள்

பின்பு ஓட்டலில் இருந்து உணவு மற்றும் மசாலா போன்றவைகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட என்ன காரணம் என உணவு சாம்பிள்களின் ஆய்வு முடிவு வந்தால்தான் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Doctor Vikatan: 18 வயது பெண்ணுக்கு நரைமுடி வருவதை தடுக்க முடியுமா? இளநரை பிரச்னைக்கு தீர்வு என்ன?

Doctor Vikatan: என்மகளுக்கு18 வயதுதான் ஆகிறது. அதற்குள் அவளுக்கு தலையில் நிறைய வெள்ளைமுடிகள் இருக்கின்றன. இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் மொத்த தலையும் நரைத்துவிடுமோ என பயமாக உள்ளது. இதைத... மேலும் பார்க்க

``ஆண்களுக்கான கேன்சர் பரிசோதனை; இனி வீட்டிலேயே செய்யலாம்'' - ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

கேன்சரில் பல வகைகள் இருக்கின்றன. அந்த வகையில், ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடிய கேன்சர்களில் இரண்டாவது இடம் புராஸ்ட்டேட் கேன்சருக்குத்தான். எந்த உடல் பாகத்தில் கேன்சர் வருகிறதோ, அதன் பெயராலேயே கேன்சரை குற... மேலும் பார்க்க

US: ``வெனிசுலா உடன் வணிகம் செய்தால் 25% வரி!'' - ட்ரம்பின் புது அதிரடி; இந்தியாவை பாதிக்குமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'எந்த நாடுகள் வெனிசுலா நாட்டிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குகிறதோ, அந்த நாடுகளின் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படும்' என்று நேற்று எச்சரித்துள்ளார். இதுக்குறித்து தனது... மேலும் பார்க்க

``தமிழ் பண்பாட்டை ஆளுநர் ரவி அழகாக பாதுகாக்கிறார்'' - பார்த்திபன் பேசியது என்ன?

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார். நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீட்டில் கொட்டப்பட்ட கழிவுநீர், தாக்குதல்.. - திருமா, இ.பி.எஸ் கண்டனம்

நேற்று யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டின் பின்பக்க கதவு வழியாக சிலர் புகுந்து, வீட்டிற்குள் கழிவு நீர் போன்றவற்றை கொட்டியுள்ளனர். மேலும், அவரது வீட்டில் இருந்த பொருள்களை அடித்து உடைத்துள்ளனர். சவுக்கு ... மேலும் பார்க்க

`முன்னிறுத்தப்பட்ட இந்தி; புறக்கணிக்கப்பட்ட கன்னட மொழி' - வைரலாகும் பெங்களூர் RSS நிகழ்ச்சி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கல... மேலும் பார்க்க