செய்திகள் :

``ஆண்களுக்கான கேன்சர் பரிசோதனை; இனி வீட்டிலேயே செய்யலாம்'' - ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

post image

கேன்சரில் பல வகைகள் இருக்கின்றன. அந்த வகையில், ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடிய கேன்சர்களில் இரண்டாவது இடம் புராஸ்ட்டேட் கேன்சருக்குத்தான். எந்த உடல் பாகத்தில் கேன்சர் வருகிறதோ, அதன் பெயராலேயே கேன்சரை குறிப்பிடுவோம். புராஸ்ட்டேட் என்பது ஆண்களின் உடலில் சிறுநீரகப்பைக்கு கீழே சிறுநீரகக்குழாயினை சுற்றி அமைந்துள்ள ஒரு சுரப்பி. புராஸ்ட்டேட் சுரப்பியில் உள்ள செல்கள் கட்டுக்கடங்காமல் அதிக அளவில் வளரும்போதுதான் புராஸ்ட்டேட் கேன்சர் உருவாகிறது.

prostate cancer

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம், '100 ஆண்களில் 13 நபர்கள் அவர்களது வாழ்வில் ஏதோவொரு கட்டத்தில் புராஸ்ட்டேட் புற்று நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் பெரும்பாலானவருக்கு அதிக பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால், வருடத்திற்கு இவற்றில் இரண்டு சதவீதம் மக்கள் புராஸ்ட்டேட் புற்று நோயினால் உயிரிழக்கிறார்கள்' என்கிறது.

ரத்த பரிசோதனை மூலமாகவோ, மலக்குடலை பரிசோதித்தோ தான் இதுவரை புராஸ்ட்டேட் கேன்சரை கண்டறிய முடிந்தது. ஆனால், இந்த இரண்டு பரிசோதனைகளையும் தொடர்ச்சியாக செய்தால் மட்டுமே இந்த கேன்சரை கண்டறிய முடியும். கேன்சர் கட்டியா, கேன்சர் அல்லாத கட்டியா என்பதை தெரிந்துகொள்ள திசு பரிசோதனை செய்தாலோ, சம்பந்தப்பட்டவர்களுக்கு காயம் ஏற்படும். ஆனால், உமிழ்நீர் சுரப்பி பரிசோதனை மூலமாக, சம்பந்தப்பட்டவருடைய உமிழ் நீரில் இருக்கிற டி.என்.ஏ மூலமாக புராஸ்ட்டேட் கேன்சர் தொடர்பான சிறிய அளவிலான மரபணு மாற்றங்களையும் கண்டுபிடித்துவிட முடியும்.

வலி

புராஸ்ட்டேட் கேன்சரின் அறிகுறிகளான, சிறுநீர் கழிப்பதற்கான கட்டுப்பாட்டு இழப்பு, மலம் கழிப்பதற்கான கட்டுப்பாட்டு இழப்பு, விந்துவுடன் ரத்தம் வெளியேறுதல், இடுப்புப்பகுதியில் வலி, மலம் கழிக்கும்போது எரிச்சலான உணர்வு, இரவு நேரங்களில் மிக அவசரமாக மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு போன்றவை ஏற்பட்டால், இந்த உமிழ்நீர் பரிசோதனையை வீட்டிலேயே செய்ய முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Doctor Vikatan: 18 வயது பெண்ணுக்கு நரைமுடி வருவதை தடுக்க முடியுமா? இளநரை பிரச்னைக்கு தீர்வு என்ன?

Doctor Vikatan: என்மகளுக்கு18 வயதுதான் ஆகிறது. அதற்குள் அவளுக்கு தலையில் நிறைய வெள்ளைமுடிகள் இருக்கின்றன. இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் மொத்த தலையும் நரைத்துவிடுமோ என பயமாக உள்ளது. இதைத... மேலும் பார்க்க

US: ``வெனிசுலா உடன் வணிகம் செய்தால் 25% வரி!'' - ட்ரம்பின் புது அதிரடி; இந்தியாவை பாதிக்குமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'எந்த நாடுகள் வெனிசுலா நாட்டிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குகிறதோ, அந்த நாடுகளின் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படும்' என்று நேற்று எச்சரித்துள்ளார். இதுக்குறித்து தனது... மேலும் பார்க்க

``தமிழ் பண்பாட்டை ஆளுநர் ரவி அழகாக பாதுகாக்கிறார்'' - பார்த்திபன் பேசியது என்ன?

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார். நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீட்டில் கொட்டப்பட்ட கழிவுநீர், தாக்குதல்.. - திருமா, இ.பி.எஸ் கண்டனம்

நேற்று யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டின் பின்பக்க கதவு வழியாக சிலர் புகுந்து, வீட்டிற்குள் கழிவு நீர் போன்றவற்றை கொட்டியுள்ளனர். மேலும், அவரது வீட்டில் இருந்த பொருள்களை அடித்து உடைத்துள்ளனர். சவுக்கு ... மேலும் பார்க்க

மந்தி பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம் நாகர்கோவில் ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் லியாகத் என்ற பெயரில் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம்... மேலும் பார்க்க

`முன்னிறுத்தப்பட்ட இந்தி; புறக்கணிக்கப்பட்ட கன்னட மொழி' - வைரலாகும் பெங்களூர் RSS நிகழ்ச்சி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கல... மேலும் பார்க்க