செய்திகள் :

Parliament: பதாகைகளை ஏந்தி எதிக்கட்சிகள் கடும் அமளி; மக்களவை ஒத்திவைப்பு!

post image

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வார விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. மக்களவையிலும் - மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களவையில், தொகுதி மறு சீரமைப்பு, வக்காளர் அடையாள அட்டை குளறுபடி உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களை அமைதியாகும்படி சபாநாயகர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், அமளி கட்டுக்குள்வரவில்லை என்பதால் மக்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மாநிலங்களவையில் மத்திய சட்டப்பாதுகாப்புத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, `` காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவர், முக்கியப் பொறுப்பில் இருப்பவர் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக பேசுகிறார். இது எப்படி சரியாகும். அண்ணல் அம்பேத்கர் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அறவே கூடாது என வலியுறுத்தியிருக்கும் நிலையில், சட்டத்தை திருத்துவோம் எனப் பேசியிருக்கிறார். இது எப்படி சரியான நடைமுறையாகும்" எனப் பேசினார்.

மத்திய அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத்தான் குறிப்பிட்டு பேசுவதாக காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பா.ஜ.க எம்.பி-களும் கோஷம் எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டிருக்கிறது.

``ஆண்களுக்கான கேன்சர் பரிசோதனை; இனி வீட்டிலேயே செய்யலாம்'' - ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

கேன்சரில் பல வகைகள் இருக்கின்றன. அந்த வகையில், ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடிய கேன்சர்களில் இரண்டாவது இடம் புராஸ்ட்டேட் கேன்சருக்குத்தான். எந்த உடல் பாகத்தில் கேன்சர் வருகிறதோ, அதன் பெயராலேயே கேன்சரை குற... மேலும் பார்க்க

US: ``வெனிசுலா உடன் வணிகம் செய்தால் 25% வரி!'' - ட்ரம்பின் புது அதிரடி; இந்தியாவை பாதிக்குமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'எந்த நாடுகள் வெனிசுலா நாட்டிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குகிறதோ, அந்த நாடுகளின் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படும்' என்று நேற்று எச்சரித்துள்ளார். இதுக்குறித்து தனது... மேலும் பார்க்க

``தமிழ் பண்பாட்டை ஆளுநர் ரவி அழகாக பாதுகாக்கிறார்'' - பார்த்திபன் பேசியது என்ன?

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார். நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீட்டில் கொட்டப்பட்ட கழிவுநீர், தாக்குதல்.. - திருமா, இ.பி.எஸ் கண்டனம்

நேற்று யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டின் பின்பக்க கதவு வழியாக சிலர் புகுந்து, வீட்டிற்குள் கழிவு நீர் போன்றவற்றை கொட்டியுள்ளனர். மேலும், அவரது வீட்டில் இருந்த பொருள்களை அடித்து உடைத்துள்ளனர். சவுக்கு ... மேலும் பார்க்க

மந்தி பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம் நாகர்கோவில் ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் லியாகத் என்ற பெயரில் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம்... மேலும் பார்க்க

`முன்னிறுத்தப்பட்ட இந்தி; புறக்கணிக்கப்பட்ட கன்னட மொழி' - வைரலாகும் பெங்களூர் RSS நிகழ்ச்சி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கல... மேலும் பார்க்க