செய்திகள் :

உச்சநீதிமன்ற நீதிபதிகள் வந்தது சரி, பிரதமர் எப்போது வருவார்?காங்கிரஸ் கேள்வி!

post image

மணிப்பூர் வருகை தந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவைக் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் வரவேற்றார் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எப்போது மாநிலத்திற்கு வருகை தருவார் என்ற கேள்வியை எழுப்பினார்.

தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ரமேஷ் கூறுகையில்,

மணிப்பூருக்கு வருகை தந்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி. விஸ்வநாதன், என். கோடீஸ்வர் ஆகிய ஆறு நீதிபதிகளை நாங்கள் வரவேற்கிறோம்.

மாநிலத்தில் கடந்த 22 மாதங்களில் இனகலவர மோதலால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். சுமார் 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இன்றும் கூட மணிப்பூரில் அச்சமான சூழலே நிலவி வருகின்றது.

மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13ல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மணிப்பூரில் அரசியலமைப்பு முற்றிலுமாக தகர்க்கப்பட்டுவிட்டதாக ஆக.1ல் உச்சநீதிமன்றம் கூறிய பிறகும், குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த 18 மாதங்கள் ஆனது ஏன்? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுச் சென்றது நல்லது, ஆனால் பிரதமர் எப்போது மணிப்பூருக்கு வருவார்கள் என்பதுதான் பெரிய கேள்வி?

சூரசந்த்பூரில் உள்ள நிவாரண முகாமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று காலை பார்வையிட்டனர். முகாம்களில் உள்ளவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதங்களின்போது மணிப்பூரின் நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசாததற்காகவும் காங்கிரஸ் எம்பி விமர்சித்தார்.

உள்துறை அமைச்சர் தனது உள்துறை அமைச்சகத்தின் பணிகள் குறித்து மாநிலங்களவையில் சுமார் 4 மணி நேரம் பதிலளித்தார். ஆனால் மணிப்பூர் பற்றி அவர் அதிகம் பேசவில்லை. தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற பாஜகவிடம், பற்றி எரியும் மணிப்பூர் குறித்து எந்த பதிலும் இல்லை. பிரதமர் ஏன் அங்குச் செல்லவில்லை என்பதற்கும் இதுவரை பதில் இல்லை என்று அவர் விமர்சித்தார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி மணிப்பூரில் நடைபெற்ற மோசமான வன்முறை சம்பவங்கள் நூற்றுக்கணக்கானோா் உயிரிழக்கவும், 50,000-க்கும் மேற்பட்டவா்கள் இடம்பெயரவும் வழிவகுத்தது. இன்றளவும் அந்த மாநிலம் முழுவதும் நிவாரண முகாம்களில் மக்கள் தஞ்சமடைவது நீடித்து வருகிறது என்பது வருந்தத்தக்கதாகும்.

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 44% அதிகரிப்பு!

நாடு முழுவதும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 44% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி 250 கோடி பேர் உள்நாட்டில் சுற்றுலா சென்றுள்ளதாகவும், இதில் சுற்றுல... மேலும் பார்க்க

ஏப். 14-ல் ஹரியாணா செல்கிறார் பிரதமர் மோடி!

புதிய விமான நிலையம் திறப்பதற்காக ஏப். 14ஆம் தேதி ஹரியாணா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை!

தீவிபத்தின்போது கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை தில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.மாா... மேலும் பார்க்க

மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவிலான செயற்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

புது தில்லி: உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது நாடெங்கிலும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவற்றைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக மாணவர்களின் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு: வெளியானது அறிவிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், படிகள், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை உயர்த்தி வழங்குவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரு... மேலும் பார்க்க

'ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி இருந்தால் இந்த நாடு அழிந்துவிடும்' - ராகுல் காந்தி

ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி முறை இருந்தால் இந்த நாடு அழிந்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். தில்லியில் புதிய கல்விக் கொள்கை, யுஜிசியின் புதிய விதிகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்டவ... மேலும் பார்க்க