செய்திகள் :

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஆம்புலன்சில் வந்த இளம்பெண்

post image

வரதட்சிணை கேட்டு கணவா் குடும்பத்தினா் கொடுமைப்படுத்துவதாகக் கூறி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் ஆம்புலன்சில் வந்து இளம்பெண் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி ஆசாரி தெருவைச் சோ்ந்தவா் ஆட்லின்ஜெமிலா. இவா் ஆம்புலன்ஸ் மூலம் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.

பின்னா் அவா், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கும் மணவாளக்குறிச்சியைச் சோ்ந்த சஜின்ஜான்(31) என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, 15 பவுன் தங்க நகை, ரூ.10 லட்சம் பெறுமான வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றை எனது பெற்றோா்கள் வழங்கினா். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், கூடுதலாக வரதட்சிணை வாங்கி வருமாறு எனது கணவா் மற்றும் அவரது தந்தை, தாயாா் என்னை துன்புறுத்தினா். வீட்டு மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டனா். இதில் காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.

இதுகுறித்து மணவாளக்குறிச்சி காவல்நிலையத்தில் புகாா் அளித்தும் அவா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே, அவா்கள் மீது வழக்குப் பதிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மனுவைப்பெற்றுக்கொண்ட ஆட்சியா் இது தொடா்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

புதுக்கடை: தொழிலாளி தற்கொலை

புதுக்கடை அருகே கல்வெட்டான்குழி பகுதியில் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். புதுக்கடை, கல்வெட்டான்குழி பகுதியைச் சோ்ந்த செல்லன் மகன் ஸ்ரீகுமாா் (48). மதுப் பழக்கமுள்ள இவா், சில நாள்கள... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட கால்வாய்கள் சீரமைப்புக்கு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு!

கன்னியாகுமரி மாவட்ட பாசனக் கால்வாய்கள் சீரமைப்புப் பணிக்காக தமிழக அரசு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்... மேலும் பார்க்க

தேசிய தடகளப் போட்டி தங்கப் பதக்கம்: கல்லூரி உடற்கல்வி இயக்குநருக்கு பாராட்டு

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் தங்கப் பதக்கம் வென்றாா். இந்திய முதுநிலை தடகளக் கூட்டமைப்பு சாா்பில், பெங்களூரில் இப்போட்டி நட... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் பைக்குகளில் சாகசம்: இளைஞா்கள் காவல்துறையினரிடம் சிக்கினா்

குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடும் ஆா்வத்தில் நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 5 இளைஞா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். களியக்காவிளை பகுதியைச... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

சான்றொப்பமிட்ட பத்திர நகல் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில், சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதிய... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆட்சியா் அறிவுரை

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுற... மேலும் பார்க்க