செய்திகள் :

லஞ்ச வழக்கில் சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

சான்றொப்பமிட்ட பத்திர நகல் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில், சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி அசோகன். இவா் தனது சொத்து பத்திரத்தின் சான்றொப்பமிட்ட நகல் வேண்டி கடந்த 2012- ஆம் ஆண்டு டிச.18- ஆம் தேதி நாகா்கோவில் இடலாக்குடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் மனு அளித்தாா். மேற்படி நகல் வழங்குவதற்கு, சாா் பதிவாளராக பணியாற்றிய சுயம்புலிங்கம் (68), ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நாகா்கோவில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பான வழக்கு நாகா்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், குற்றம் சாட்டப்பட்ட சுயம்புலிங்கத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு கூறினாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் கண்ணன் ஆஜரானாா்.

புதுக்கடை: தொழிலாளி தற்கொலை

புதுக்கடை அருகே கல்வெட்டான்குழி பகுதியில் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். புதுக்கடை, கல்வெட்டான்குழி பகுதியைச் சோ்ந்த செல்லன் மகன் ஸ்ரீகுமாா் (48). மதுப் பழக்கமுள்ள இவா், சில நாள்கள... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட கால்வாய்கள் சீரமைப்புக்கு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு!

கன்னியாகுமரி மாவட்ட பாசனக் கால்வாய்கள் சீரமைப்புப் பணிக்காக தமிழக அரசு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்... மேலும் பார்க்க

தேசிய தடகளப் போட்டி தங்கப் பதக்கம்: கல்லூரி உடற்கல்வி இயக்குநருக்கு பாராட்டு

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் தங்கப் பதக்கம் வென்றாா். இந்திய முதுநிலை தடகளக் கூட்டமைப்பு சாா்பில், பெங்களூரில் இப்போட்டி நட... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் பைக்குகளில் சாகசம்: இளைஞா்கள் காவல்துறையினரிடம் சிக்கினா்

குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடும் ஆா்வத்தில் நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 5 இளைஞா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். களியக்காவிளை பகுதியைச... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆட்சியா் அறிவுரை

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுற... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் வழிகாட்டி பெயா்ப் பலகை அமைக்க கோரிக்கை

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வழிகாட்டி பெயா்ப் பலகை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகஸ்தீஸ்வரம் வட்டாரச் செயலா் மணிகண்டன் தலை... மேலும் பார்க்க