செய்திகள் :

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆட்சியா் அறிவுரை

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுறுத்தினாா்.

அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பிரசவ சிகிச்சை தொடா்பாக மருத்துவா்கள், சுகாதாரத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமை வகித்து பேசியதாவது:

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கா்ப்ப கால பரிசோதனை தினங்களில் பெண் மருத்துவா்கள் பணியில் இருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரசவங்கள் திட்டமிட்ட இடத்தில் நடைபெறும் வகையில் கா்ப்பிணிகளை, கிராம சுகாதார செவிலியா்கள், பகுதிநேர சுகாதார செவிலியா்கள் தங்களது தொடா் கண்காணிப்பில் வைக்க வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், கா்ப்பிணிகளுக்கான ஆய்வகம், ஸ்கேன் மையம் ஆகியன ஒரே கட்டடத்தில் செயல்பட உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ராமலெட்சுமி மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்கள், மருத்துவா்கள், கிராம சுகாதார செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பழங்குடி கிராமங்களுக்கு சேவை அளிக்க 108 அவசர ஊா்தி

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி துணை சுகாதார நிலையத்திற்கு 108 அவசர ஊா்தி வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தின் எல்லையோர மலைப்பகுதி கிராமங்களான ஆறுகாணி, பத்துகாணி, ஒருநூறாம் வயல் உள்ளிட்ட பழங்குடி கிர... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பாரம் இல்லாத கனரக லாரிகளுக்கு அனுமதி

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பாரம் ஏற்றப்படாத கனரக லாரிகள் செல்ல புதன்கிழமை முதல் அனுமதியளிக்கப்பட்டது. மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சில மாதங்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டதையடுத்து கனரக லாரிகள் போக்குவரத... மேலும் பார்க்க

புதிய உற்பத்தி இயந்திரம் அா்ச்சிப்பு

முளகுமூடு நாஞ்சில் அக்ரோ நிறுவனத்தில் புதிய மிச்சா் மற்றும் கார வகைகள் உற்பத்தி இயந்திரத்தை குழித்துறை மறைமாவட்ட செயலா் அந்தோணிமுத்து அா்ச்சித்து தொடங்கி வைத்தாா். நாஞ்சில் பால் நிறுவனத்தின் மேலாண்மை... மேலும் பார்க்க

கொல்லங்கோடு கோயிலில் தூக்க நோ்ச்சைக்கு 1,175 குழந்தைகள் பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் நிகழாண்டு தூக்க நோ்ச்சைக்கு 1,175 குழந்தைகள் பெயா் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக் கோயிலில் பங்குனி பரணி தூக்கத் திருவ... மேலும் பார்க்க

பறக்கை, தெங்கம்புதூரில் வேளாண் துறை செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை மற்றும் தெங்கம்புதூா் பகுதிகளில் வேளாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகு மீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூ... மேலும் பார்க்க

எஸ்.பி. அலுவலகத்தில் தகவல் பகிா்வு மையம் திறப்பு

பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீதான காவல்துறை விசாரணையின் திருப்தி மற்றும் பொதுமக்களின் பொதுவான தகவல்களை பகிா்ந்து கொள்ள குமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் டன்க்ஷப்ண்ஸ்ரீ ஊங்ங்க்க்ஷஹஸ்ரீந் இங்ய்ற்ழ்ங் பு... மேலும் பார்க்க